search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rotary"

    • ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது.
    • மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில்  பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது. ஊராட்சி மன்றதலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சதாசிவம் வரவேற்றார்.மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்.பண்ருட்டி ஜெயம் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் புதுவை அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்துநடத்திய இந்த முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். இதில் எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் அருள்,முந்திரி ஏற்றுமதியாளர் பாரதிதாசன் நளபாகம் ராஜா,பூக்கடை பாலமுருகன் காய்கனி சங்கம் சக்திவேல் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    • சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.
    • ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்

    திருவாரூரில் உள்ள ஹோட்டல் செல்விஸ்சில் விஜயபுரம் ரோட்டரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் அவார்டை மண்டல துணை ஆளுநர் ரோட்டரியன் சொக்கலிங்கம் கலந்து கொண்டு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜயபுரம் ரோட்டரி தலைவர் மற்றும் சாசன தலைவர் ரோட்டரியன் அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளர் ரோட்டரியன் செந்தில்குமார், பொருளாளர் ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
    • கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் ஹசனுதின் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3212 முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, துணை ஆளுநர் பாபு, பட்டயத்தலைவர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தலைவராக சுல்தான் சம்சூல் கபீர், செயலாளராக சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பட்டயத்தலைவர் அலாவுதீன் வரவேற்றார். பேராசிரியர் முகம்மது ஆசிப், கல்லூரி மாணவி ஆய்சத் ருக்சானா உள்ளிட்ட பலர் பேசினர்.

    நலத்திட்ட உதவிகளாக ரொக்கபரிசு பி.வி.எம். அறக்கட்டளைக்கும், மாணவி மர்யமின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டது. 10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர் மற்றும் பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த இளம் தலைமுறை மாணவ மாணவிகள் 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • 10, 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் முத்து தலைமையில் நடந்தது. தலைவராக அங்குராஜ், செயலாளராக பால்சாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.

    மாவட்ட செயலாளர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி ஆளுநர் குமரேசன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    10 மற்றும் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    நகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேருக்குபுத்தாடைகள் வழங்கப்பட்டது. 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.

    ×