search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடை"

    • பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருப்பூர் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள், உரிய விவரங்களுடன் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

    கடை அமையும் இடத்தின் வரைபடம். பட்டா மற்றும் ஆவணம், உரிமக்கட்டணம், 600 ரூபாய் செலுத்திய சலான், சொத்து வரிக்கான ரசீது, வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், விண்ணப்பதாரர் போட்டோ, முகவரி சான்று மற்றும் தீயணைப்பு துறை சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில், கூறியுள்ளார்."

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்‌.

    மதுரை

    மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி படிவம் எண் ஏ.இ.5 என்ற படிவத்தனை பூரத்தி செய்து ரூ.2க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் (இணையதளத்தில் பதிவிறக்கம்) பாஸ்போர்ட் புகைப்படத்துடன், விண்ணப்பதாரரின் கூடுதல் பாஸ்போர்ட் புகைப்படம்-2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்), தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (2 வழிகள் இருக்கவேண்டும்) வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்,

    மனுதாரர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும், உத்தேசிக்கப்பட்ட கடை அமையவுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகைக் கட்டிடமாக இருப்பின் 2023-2024-ம் ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2023 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரின் சம்மத க்கடிதம் மற்றும் கட்டிட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக்கொண்ட வாடகை முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலு டன்). ஒப்பந்தப்பத்திரம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், மாநகராட்சி டி.அண்டு சி. ரசீது,

    ஏற்பு உறுதி ஆவணம் (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்) கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம் 2 கோணங்க ளில், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை (அல்லது) ஆதார் அட்டை நகல்கள் ரூ.900/- விண்ணப்ப உரிமம் கட்டணம் (திருப்பித்தர இயலாது).

    அசல் விண்ணப் பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல் இணைக்கப்படவேண்டும். செப்டம்பர் 21ம் தேதி 1 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசார ணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

    வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த கால கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப் பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.

    • நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும்

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம் ஏ.இ.5-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிம கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட வேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும்.

    வாடகை கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தம் ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருந்தால் அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்க வேண்டும்.

    பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய கட்டிட உரிம கட்டணம் செலுத்திய ரசீது இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பெறாத விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு கடைகளை தணிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    திருப்பத்தூர் தாலுகாவில் 36, நாட்டறம்பள்ளி தாலுகாவில் 25, வாணி யம்பாடி தாலுகாவில் 17, ஆம்பூர் தாலுகாவில் 4 என மொத்தம் 82 பட்டாசு கடைகள் உள்ளது. இந்த கடைகளை தணிக்கை செய்து, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான வழிமுறையின்படி அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    மேலும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக உரிமம் வழங்கும் இடத்தில் இருப்பில் உள்ள பட்டாசுகளை அகற்ற வேண்டும்.

    மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஆய்வு செய்து உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அனைத்து தாசில்தார்களும், பொது மக்கள் பயனடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார், குடும்ப அட்டை, பட்டா, வங்கி கணக்கு, வீட்டுமனை ஆகிய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன், வருவாய் கோட்டாட்சி யர்கள் லட்சுமி, பிரேமலதா, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், சம்பத், குமார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர் சாலையில் தனியார் பட்டாசு கடை உள்ளது. இதன் அருகே பட்டாசு குடோனும் அமைந்துள்ளது. இந்த பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    அருகே இருந்த பட்டாசு குடோன் மீது தீப்பொறி விழுந்தது. குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கின. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

    அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்பாபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

    • மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.
    • விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பத்திருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர். கடை அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்றும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.

    ஆய்வுக்கு பின் மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 84 பேருக்கு மாநகராட்சியில் இருந்து தடையின்மை சான்று பெற்று வழங்கியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 26 பேருக்கு தடையின்மை சான்று கிடைத்த உடன் அனுமதிக்கப்படும். இதேபோல் திருப்பூர் புறநகர் பகுதிகளில் 132 பேரில் 128 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை.
    • ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்காக 6109 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5783 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 326 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும்.

    பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்பு துறை இயக்குனர்கள் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தரை தளத்தில் மட்டுமே பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது.

    அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது. மேலும் அந்த அறை 25 சதுர மீட்டருக்கும் அதிகமான சுற்றளவில் இருக்கக்கூடாது.

    ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளை விற்பனை செய்யக்கூடாது. 'இங்கு புகை பிடிக்கக்கூடாது' என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    அலங்கார மின் விளக்குகளை தொங்கவிடக்கூடாது. உரிமம் பெற்ற கட்டிடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக்கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.

    பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசு கடையில் குறைந்த பட்சம் 2 தீயணைப்பு கருவிகள், 2 லாரிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    தணிக்கை செய்வதற்காக அதிகாரிகள் வரும்போது பட்டாசு கடையின் உரிமத்தை அவர்களின் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இதுபோல மொத்தம் 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி மற்றும் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.
    • வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு கடை அமைக்க வியா பாரிகள் உரிய அனுமதியை பெற தேவை யான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு கடை அமைக்க அனுமதிப்பது குறித்து தீயணைப்பு, போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    கடந்த மாதம் 30-ந் தேதி பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்போர் விண்ணப்பிக்க கால அவகாசம் வருவாய் துறை யினரால் அளிக்கப்பட்டு இருந்தது. பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.

    விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது. அந்தந்த தீய ணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றினை நிலைய தீயணைப்பு அலுவலர்கள் முழுமையான ஆய்வுக்கு பின் வழங்குவர்.

    குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்துவர். தடையின்மை சான்று கோரி தினமும் விண்ண ப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை உடனு க்குடன் அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது நிலைய தீயணைப்பு அலுவலர்களுக்கே நன்கு தெரியும். எனவே விதிமுறை களை பின்பற்றியே தடை யின்மை சான்று வழங்குவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் இணையதளம்வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்து டன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிமக் கட்டணமாக செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டு (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை , பான் அட்டை , ஸ்மார்ட் குடும்ப அட்டை), உள்ளாட்சி அமைப்பில் கட்டிடம், வீட்டு வரி ரசீது, விண்ணப்ப தாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கவேண்டும் . விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்னவி நகர் பிரதான சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், இந்த பகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையும், உள்ளது. இவர் வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று இங்கு வந்து கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்ட உரிமம் என்றால் சுமார் 1500 கிலோ வரை இருப்பு வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகைமூட்டமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பார்த்து உடனடியாக ஓசூர் மாநகராட்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் எரிந்து கொண்டிருந்த பட்டாசு கடையை சுற்றிலும் அதிகமான குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், தனியார் மருத்துவமனை என அமைந்துள்ளது.

    இந்த பகுதி எப்போதும் அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக உள்ளது. இந்த தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.

    பட்டாசு கடை உரிமையாளர் வந்த பிறகு தான் வெடித்து சிதறிய பட்டாசுகளின் முழுமையான மதிப்பு தெரியவரும். இருப்பினும், சேதமதிப்பு பல லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என தெரிகிறது.

    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த விபத்து காரணமாக ஓசூர் டி.எஸ்.பி. அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு இருபுறமும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களை அனுமதிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக, அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    • பட்டாசு கடைகளுக்கு புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியா சங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் (டான்பாமா)கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

    இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்து டன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஏற்கனவே 4 முறை குழுவினர் பங்கேற்ற கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில் நடந்தது. அதில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில் 5 முறை இணைய வழியில் நடந்த கூட்டத்தில், பட்டாசு கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இறுதியாக தீர்மானிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுபற்றி டான்பாமா தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லிட்டர் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×