என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின
- தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்னவி நகர் பிரதான சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த பகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையும், உள்ளது. இவர் வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று இங்கு வந்து கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்ட உரிமம் என்றால் சுமார் 1500 கிலோ வரை இருப்பு வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகைமூட்டமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பார்த்து உடனடியாக ஓசூர் மாநகராட்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் எரிந்து கொண்டிருந்த பட்டாசு கடையை சுற்றிலும் அதிகமான குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், தனியார் மருத்துவமனை என அமைந்துள்ளது.
இந்த பகுதி எப்போதும் அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக உள்ளது. இந்த தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.
பட்டாசு கடை உரிமையாளர் வந்த பிறகு தான் வெடித்து சிதறிய பட்டாசுகளின் முழுமையான மதிப்பு தெரியவரும். இருப்பினும், சேதமதிப்பு பல லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என தெரிகிறது.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக ஓசூர் டி.எஸ்.பி. அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு இருபுறமும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களை அனுமதிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக, அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்