திருப்பூரில் பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு

பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருப்பூர் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள், உரிய விவரங்களுடன் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

கடை அமையும் இடத்தின் வரைபடம். பட்டா மற்றும் ஆவணம், உரிமக்கட்டணம், 600 ரூபாய் செலுத்திய சலான், சொத்து வரிக்கான ரசீது, வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், விண்ணப்பதாரர் போட்டோ, முகவரி சான்று மற்றும் தீயணைப்பு துறை சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில், கூறியுள்ளார்."

X

Maalai Malar
www.maalaimalar.com