search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க கோரி"

    • பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.
    • வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு கடை அமைக்க வியா பாரிகள் உரிய அனுமதியை பெற தேவை யான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு கடை அமைக்க அனுமதிப்பது குறித்து தீயணைப்பு, போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    கடந்த மாதம் 30-ந் தேதி பட்டாசு கடை வைக்க அனுமதி கேட்போர் விண்ணப்பிக்க கால அவகாசம் வருவாய் துறை யினரால் அளிக்கப்பட்டு இருந்தது. பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்த 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது.

    விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது. அந்தந்த தீய ணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றினை நிலைய தீயணைப்பு அலுவலர்கள் முழுமையான ஆய்வுக்கு பின் வழங்குவர்.

    குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்துவர். தடையின்மை சான்று கோரி தினமும் விண்ண ப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை உடனு க்குடன் அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், தினமும் சமையல் நடைபெறும் இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது நிலைய தீயணைப்பு அலுவலர்களுக்கே நன்கு தெரியும். எனவே விதிமுறை களை பின்பற்றியே தடை யின்மை சான்று வழங்குவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×