search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cracker shop"

    • பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது.
    • நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது.

    தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினா். தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது.

    கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    • தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12- ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னி ட்டு கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து, இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் சட்ட விதிகளை கடைப்பி டித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகா ப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் கடையின் வரைபடம் , உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான அசல் பத்திரம்,உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில், இடத்தின் கட்டட உரிமையாளரிடம் ரூ.20 க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக்க ட்டணம் ரூ.500 அரசுக் கணக்கு தலைப்பில் செலு த்தியதற்கான அசல் செலான் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ண ப்பதாரர்கள், இ-சேவை மையத்தின் மூலம் இணைய தளத்தில் விண்ணப்பி க்கலாம். மேலும், இணையத ளத்தின் மூலம் விண்ணப்பி க்கப்படும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.மேலும், தற்காலிக பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்ப ங்களை 24 -ந்தேதி ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இ-சேவை மையத்தி ன் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 24-ந் தேதிக்கு பின்னர் விண்ண ப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.
    • விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பத்திருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 111 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் 132 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கள ஆய்வு பணியை போலீசார் மேற்கொண்டனர். கடை அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்றும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.

    ஆய்வுக்கு பின் மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 84 பேருக்கு மாநகராட்சியில் இருந்து தடையின்மை சான்று பெற்று வழங்கியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 26 பேருக்கு தடையின்மை சான்று கிடைத்த உடன் அனுமதிக்கப்படும். இதேபோல் திருப்பூர் புறநகர் பகுதிகளில் 132 பேரில் 128 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ் தற்காலிக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் வருகிற 30- ந் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலைவசதி கொள்ளளவு சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம் சமர்பிக்க வேண்டும்.

    தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்தி அனுமதிக்கான அசல் செலுத்துதல், இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கடை அமைக்க உத்தேசித்துள்ள கட்டடத்தில் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆவணங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிந்த உடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரங்களை இ -சேவை மையங்கள் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ் வழிமுறை பொருந்தாது. உரிய உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டாசு கடைகளுக்கு புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியா சங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் (டான்பாமா)கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

    இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்து டன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஏற்கனவே 4 முறை குழுவினர் பங்கேற்ற கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில் நடந்தது. அதில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில் 5 முறை இணைய வழியில் நடந்த கூட்டத்தில், பட்டாசு கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இறுதியாக தீர்மானிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுபற்றி டான்பாமா தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லிட்டர் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்து விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஊட்டி:

    தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு ஒரு எதிர்வாதியாக இணைத்து கொண்டது. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்.

    வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேரம் நிர்ணயம் செய்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்க கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கூடுதல் நேரம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே மாசு இல்லாத சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரி, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்து, மாசு மற்றும் ஒலி இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    ‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 4,900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தீவுத்திடல் உள்பட 900 பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது’ என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 4,900 பட்டாசு கடைகள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 5,640 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கினோம்.

    சென்னையில் தீவுத்திடல் உள்பட 900 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தீயணைப்புத்துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் உத்தரவின்பேரில், இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    பட்டாசு கடை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டிடங்களில் மட்டுமே பட்டாசு கடைகள் நடத்த வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்து பட்டாசு கடைகள் போடக்கூடாது. உயர்அழுத்தம் மின்கம்பி செல்லும் பகுதியில் பட்டாசு கடை அமைக்கக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்பு அருகிலும் பட்டாசு கடை நடத்த அனுமதியில்லை.

    மருத்துவமனைகள், சமையல் கியாஸ் குடோன்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அதிகளவில் மக்கள் கூடும் வணிக வளாகம் போன்ற இடங்களில், பட்டாசு கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    தீவுத்திடலில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பட்டாசு கடைகளை வைக்க அனுமதித்துள்ளோம். ஒவ்வொரு பட்டாசு கடையிலும் தீயணைப்பு சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

    சென்னையில் அடிக்கடி பட்டாசு தீ விபத்து ஏற்படக்கூடிய 60 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தீயணைப்பு வண்டி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிலைய அதிகாரி தலைமையில் 5 வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    சென்னையை பொருத்தமட்டில் 75 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் தீபாவளி பண்டிகைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் பணியில் இருப்பார்கள்.

    தீ விபத்து இல்லாமல் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக வைத்து தீயணைப்புத்துறை செயல்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி 166 இடங்களில் பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் 4 இடங்களில் தான் கடந்த ஆண்டு பட்டாசு தீ விபத்து நிகழ்ந்தது.

    பட்டாசு கடைகளை கண்காணிக்க தீயணைப்புத்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையினர் ஆங்காங்கே ரோந்து சுற்றி வருவார்கள். பட்டாசு விற்பனை நடக்கும் கடைகளை கண்காணிப்பார்கள். விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு கடைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்புவோர் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பதற்கு வெடிமருந்து சட்ட விதிகளின்படி கடை உரிமையாளர்கள் அதற்கு உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் ரூ.10-க்கு நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியும், உரிம கட்டணம் ரூ.500-ஐ கருவூலத்தில் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியும், அசல் சலானுடன் வரைபடம் (5 நகல்கள்), வாடகை ஒப்பந்தப்பத்திரம், சொந்த கட்டிடம் எனில் வீட்டுவரி ரசீது ஆகியவற்றுடன் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் வெடிமருந்து விற்பனை செய்ய உள்ள கடை தரைதளத்தில் தான் இருக்க வேண்டும். இரண்டு கதவுகளும், அவசர வழியும் இருக்க வேண்டும். மேல் தளத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது. படிக்கட்டு, லிப்ட் ஆகியவைக்கு அருகில் வெடிமருந்து விற்பனை செய்யக்கூடாது.

    ஒரு வேளை தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்திற்கு தீயணைப்பு லாரிகள் செல்ல கூடிய விசாலமான சாலையில் தான் பட்டாசு கடை இருக்க வேண்டும். பட்டாசு பொருட்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருளினால் அமைக்கப்பட்ட கூடாரம் அல்லது கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். இரண்டு பட்டாசு கடைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 10 மீட்டர் இருக்க வேண்டும்.

    வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பட்டாசு உரிமம் கேட்டு வரும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×