search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் ஆகாஷ் தகவல்
    X

    தென்காசியில் பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் ஆகாஷ் தகவல்

    • தென்காசி மாவட்டத்தில் பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ் தற்காலிக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் வருகிற 30- ந் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலைவசதி கொள்ளளவு சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம் சமர்பிக்க வேண்டும்.

    தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்தி அனுமதிக்கான அசல் செலுத்துதல், இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கடை அமைக்க உத்தேசித்துள்ள கட்டடத்தில் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆவணங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிந்த உடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரங்களை இ -சேவை மையங்கள் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ் வழிமுறை பொருந்தாது. உரிய உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×