search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசவராஜ் பொம்மை"

    • பா.ஜனதாவின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள்.
    • 60 தொகுதிகளில் காங்கிரசுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பிற கட்சிக்கு செல்கிறார்கள். இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருத்து கூறியுள்ளார்.

    அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட பொதுவாக ஆளுங்கட்சியில் அதிகம் பேர் டிக்கெட் கேட்பார்கள். அதேபோல் தான் தற்போது எங்கள் கட்சியில் அதிக எண்ணிக்கையில் வாய்ப்பு கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சி தொண்டர்களிடம் பேசியுள்ளோம். சில தலைவா்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசையில் கட்சியை விட்டு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் சென்றாலும் தொண்டர்கள் கட்சியில் தான் உள்ளனர். கட்சி தொண்டர்கள் உறுதியுடன் உள்ளனர்.

    60 தொகுதிகளில் காங்கிரசுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்த சிலரை அக்கட்சியினர் ஏற்கனவே சேர்த்து கொண்டனர். அதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் கட்சி மற்றும் தொண்டர்கள் வலுவாக உள்ளனர். பா.ஜனதாவின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா -2’ திரைப்பட வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
    • இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்துள்ளார்.


    ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"கொல்லூரில் முகாம்பிகை தரிசனம் செய்ய சென்ற போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்தேன், எனக்கு அரசியல் சாயம் வேண்டாம், காந்தார எழுத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன், உங்கள் அனைவரின் அன்பும் வரமாக அமையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    வரவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை.
    • மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. அதிருப்தியில் உள்ளவர்களிடம் நாங்கள் பேசி அவர்களை சமாதானப்படுத்தும் பணியையும் செய்து வருகிறோம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.

    லட்சுமண் சவதிக்கும், எனக்கும் இடையே உணர்வு பூர்வமான உறவு உள்ளது. நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அவர் கஷ்டத்தில் இருந்தபோது, அவரை கட்சி காப்பாற்றியது. வரும் நாட்களில் அவரை கட்சி காப்பாற்றும் பணியை செய்யும். அவரது கவுரவத்தை காப்பாற்ற ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். அவருக்கு வரும் நாட்களில் நல்ல எதிர்காலம் உள்ளது.

    நான் பா.ஜனதாவுக்கு வருவதற்கு முன்பு காங்கிரசில் சேர திட்டமிட்டு இருந்ததாக லட்சுமண் சவதி கூறியுள்ளார். இது தவறு. நான் வீட்டில் இருந்தபோது, பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, அனந்தகுமார், சி.சி.பட்டீல், லட்சுமண் சவதி ஆகியோர் என்னை சந்திக்க வந்தது உண்மை தான். ஆனால் நான் காங்கிரசில் சேரும் திட்டத்தில் இருக்கவில்லை. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார்.
    • இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    பெங்களூரு

    கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளோம். இந்த பட்டியல் இன்று (நேற்று) அடுத்த சில மணி நேரத்தில் வெளியாகும். உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார். அவர் டெல்லி திரும்பியதும், அவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது அனுபவம் எங்களுக்கு தேவை. அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பார்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு நாங்கள் தொலைபேசி மூலம் பேசி புதிய நபர்களுக்கு வழிவிடுமாறு கூறினோம். அதற்கு அவர், நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கி உள்ளது, அதனால் இன்னொரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.
    • மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவு காங்கிரசுக்கு இல்லை என பொம்மை விமர்சனம்

    சிவமோகா:

    கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சிவமோகாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் நியமித்துள்ள வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எனவே, எங்கள் கட்சியில் இருந்து தலைவர்களை இழுக்க முயற்சிக்கின்றனர். நான் ஏற்கனவே கூறியபடி, டிகே சிவக்குமார் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்போது எங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, சீட் கொடுப்பதாக கூறி கட்சியில் இணையும்படி கேட்டிருக்கிறார். மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவும் காங்கிரசுக்கு இல்லை. எனவே, கடந்த தேர்தலை விட இந்த முறை அவர்கள் (காங்கிரஸ்) மோசமான தோல்வியை சந்திப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாஜக எம்எல்ஏக்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்ததாகவும், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத தொகுதிகளில் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் பசவராஜ் பொம்மை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் 2019ல் பாஜக தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை இழுத்ததாக டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
    • சித்தராமையா முதல்-மந்திரி ஆகி விடலாம் என்று கனவு காண்கிறார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணியில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட அளவில் உள்ள கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அவர்களது கருத்துகள் கேட்டு அறிந்தவுடன், பா.ஜனதாவின் தலைமை தேர்தல் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். எனவே இன்னும் வாரத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் இருக்கிறது. பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    சித்தராமையா முதல்-மந்திரி ஆகி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. 2013-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தார். 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எதற்காக அவரை மக்கள் புறக்கணித்தனர். முதல்-மந்திரியாக இருந்த போது மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்திருந்தால், மக்கள் புறக்கணித்திருக்க மாட்டார்கள்.

    தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் சித்தராமையாவை மக்கள் புறக்கணிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியில் எதற்காக இடஒதுக்கீடு வழங்கவில்லை. நான் தற்போது திடமான முடிவை எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் விதமாக இடஒதுக்கீடு வழங்கி அறிவித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • அரசியலுக்கும் வர மாட்டேன்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. இந்தநிலையில், பிரபல கன்னட நடிகர் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது.

    இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியும் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், நடிகர் சுதீப்பும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சுதீப் கூறியதாவது:-

    நான் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எனக்கு ஆதரவாக இருந்திருந்தார். கஷ்டமான நேரத்தில் எனக்கு உதவிகளையும் செய்துள்ளார். தனக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யும்படி பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார்.

    அதன்படி, பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். அவர், எந்த தொகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்ய சொல்கிறாரோ, அங்கு நான் பிரசாரம் செய்வேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சியை பார்த்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. பசவராஜ் பொம்மை என்ற ஒரு நபருக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.

    சட்டசபை தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் போட்டியிடவில்லை. அரசியலுக்கும் வர மாட்டேன். வேறு கட்சியில் இருந்து யாராவது பிரசாரத்திற்காக அழைத்தாலும், அவர்களுக்காகவும் பிரசாரம் செய்வேன்.

    நான் கஷ்ட காலத்தில் இருந்த போது உதவியவர்களுக்காக (பசவராஜ் பொம்மை), அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், அதுபற்றி கண்டிப்பாக தெரிவிப்பேன்.

    இவ்வாறு நடிகர் சுதீப் கூறினார்.

    • நடிகர் கிச்சா சுதீப் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாக இன்று காலை தெரிவித்தார்.
    • கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் சமீபத்தில் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. இதையடுத்து இன்று பாஜக கட்சியில் கிச்சா சுதீப் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.


    பசவராஜ் பொம்மை -கிச்சா சுதீப்

    இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.


    பிரகாஷ் ராஜ்

    இன்று காலை கிச்சா சுதீப் பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்தி அறிந்ததும் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

    • கர்நாடகத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி கனவில் இருந்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது. இரு தலைவர்களுமே தங்களுக்கு கிடைக்காத சி.எம். சீட்டுக்காக போராடி வருகிறார்கள்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் முக்கிய நோக்கம் அதிகாரமும், முதல் மந்திரி பதவியும் தான், கர்நாடக மக்களின் நலன் அல்ல என தெரிவித்தார்.

    • தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சோதனைக்குப் பிறகு முதலல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • நமது நாட்டுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது.
    • ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவசியமற்றது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு சமூகத்திற்கு எதிராக பேசி இருந்தார். இது சமூக மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்திருந்தது. அதனால் ராகுல்காந்தியின் பேச்சுக்கு எதிராக அந்த சமூக மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நமக்கு ஒரு சட்டம், ராகுல்காந்திக்கு என்று தனிச்சட்டம் எதுவும் இல்லை. அனைத்து தரப்பினருக்கும் சட்டம் ஒன்று தான். கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த காரணத்தால், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தை எதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பெரிது படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

    நமது நாட்டுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி அனைவரும் நடந்து கொள்வது கடமையாகும். நாம் என்ன பேசினாலும், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனோபாவம் இருக்கிறது. இது பலர் மத்தியில் உள்ளது. அதனால் என்னவோ, ராகுல்காந்தி இப்படி பேசி இருக்கலாம். ராகுல்காந்தி தனது பேச்சை சரி செய்து கொள்ள காலஅவகாசம் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    அதனை விட்டுவிட்டு சாலையில் இறங்கி போராடுவது தேவையற்றது. தேவையில்லாமல் பேசுவதும் சரியானது இல்லை. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவசியமற்றது. சட்ட விதிமுறைகளின் படியே ராகுல்காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். அதனால் எந்த தாக்கமும் இங்கு ஏற்படவில்லை. அதேபோல் தற்போது ராகுல் காந்தி பெலகாவிக்கு வந்து சென்றுள்ளார். அதனால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக கூறி இருக்கிறார். இந்த போலி வாக்குறுதிகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    லண்டனில் அவர் நமது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இது தேச விரோத செயல். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. அதனால் ராகுல் காந்தியின் பேச்சை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, 24, 26-ந் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதி உத்தரவாத அட்டையை வழங்குகிறார். இது போலி அட்டை. பிற மாநிலங்களில் காங்கிரசார் இவ்வாறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. அதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை காங்கிரசார் ஏமாற்றுகிறார்கள்.

    ஊழல் தொடர்பாக சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது சரியா?. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற 59 ஊழல்கள் குறித்து நீதி விசாரணை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த சில நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்.

    உரிகவுடா, நஞ்சேகவுடா குறித்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவந்தால் அதன் மூலம் வெற்றி கிடைக்கும். உண்மை தகவல்களை பெற அதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. வரலாற்றை இந்தியாமற்றும் கர்நாடகத்தில் திரித்துள்ளனர். வரலாற்றை திரித்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையை சொன்னால் அவர்களால் சகித்து கொள்ள முடிவது இல்லை.

    எங்கள் கட்சியில் இருந்த பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.சி., காங்கிரசில் சேர்ந்துள்ளார். குருமித்கல் தொகுதியில் பா.ஜனதா பலமாக உள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் வாபஸ் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    ×