search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்வரப்பா"

    • பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு.
    • தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவதூறாக பேசினார். இது கார்கேவின் மரியாதையை தூள் தூளாக்கிவிட்டது. யானை அளவு பலம் கொண்ட பிரதமர்மோடியை, மூட்டைப்பூச்சி அளவிலான பிரியங்க் கார்கே விமர்சிப்பது சரியல்ல.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அறிக்கை. பஜ்ரங்தள தடை விவகாரத்தில் காங்கிரஸ்தலைவர்கள் இடையே குழப்பம் உள்ளது. பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு. அதனை பி.எப்.ஐ. அமைப்புடன் ஒப்பிடுவது தவறு. இந்துக்களை ஓரங்கட்டும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. இது அக்கட்சிக்கு பேரழிவாகும்.

    ஜெகதீஷ் ஷெட்டரின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா பற்றி பேசிய ஜெகதீஷ் ஷெட்டரிடம் சுயமரியாதையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் தனது சுயமரியாதையை தேர்தல் போட்டியிடுவதற்காக விற்றுவிட்டார். ஜெகதீஷ் ஷெட்டர் இன்னும் பா.ஜனதாவின் கோட்பாட்டை கைவிடவில்லை. அவரது வீட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. யாரோ ஒருவரின் நடத்தையால் தான் பா.ஜனதாவில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

    டி.கே.சிவக்குமார் என் பின்னால் ஒக்கலிக சமுதாய மக்கள் இருப்பதாக கூறுகிறார். இவரை விட இனவெறி பிடித்த இன்னொருவர் இல்லை. சாதியின் பெயரால் தீ மூட்டும் வேலையில் ஈடுபடுகிறீர்கள். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும். பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய கூடாது என கூறி வீரப்பமொய்லியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்போம் என்ற அறிவிப்பை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி பற்றி மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார்.

    ஹாசன் :

    சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று அவர் ஹாசனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் எங்களை குடும்ப கட்சி என்று குறை கூறுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த கட்சியில் தான் தந்தை, மகன்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர்.

    அந்த கட்சியை நாங்கள் எப்படி கூற வேண்டும் என்று எச்.டி.குமாரசாமி சொல்ல வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க ஹாசனில் போட்டியிட பவானி ரேவண்ணா டிக்கெட் கேட்டார். அப்படி கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஒரே குடும்பத்தினர் இருப்பதால் தான், வேறு முகம் இருக்கட்டும் என சி.எம்.இப்ராகிமை கட்சி தலைவர் பொறுப்பு வழங்கி கட்சியில் வைத்து இருக்கிறார்கள்.

    கனகதாச ஜெயந்தியை அரசு விழாவாகவும், அந்த சமுதாய மக்கள் நலன் காக்க காகினேலே நலவாரியத்தையும் எடியூரப்பா அறிவித்தார். நாங்கள் வாக்கு வங்கிக்காக இவ்வாறு அறிவிக்கவில்லை. கனகதாசரின் சித்தாந்தம் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதுபோல் தான் அனைத்து சமுதாய மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பா.ஜனதா செய்து வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி பற்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார். இதுபோன்று பேசிய பிறகு மல்லிகார்ஜுன கார்கே கட்சி பொறுப்பில் இருப்பது சரியல்ல. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள்.
    • காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.

    சிவமொக்கா :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் நேற்று வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஈஸ்வரப்பா பேசியதாவது:-

    சாலை, சாக்கடை, குடிநீர் வசதிக்காக முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் எங்களிடம் நிவாரணம் பெறும் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றனர். எங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டுகள் தேவை இல்லை. எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள். காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.

    லிங்காயத் உள்ளிட்ட இந்து சமுதாயத்தினருக்கு எடியூரப்பா முன்மாதிரி தலைவர். சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் சென்னபசப்பா இந்து சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடிய வலிமையான தலைவர். பா.ஜனதாவை தவிர வேறு கட்சி மாநிலத்தில் வெற்றி பெற்றால், இந்துக்களுக்கு பிழைப்பு இல்லை என சிலர் கூறி வருகிறார்கள். எனவே கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.

    சிவமொக்காவில் 56 ஆயிரம் முஸ்லிம்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். அவர்களின் ஒரு ஓட்டுக்கூட எங்களுக்கு தேவையில்லை. பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொல்லப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் மவுனமாக இருந்தது. லவ் ஹிகாத் குறித்து புகார் அளிக்க பெண்கள் தயங்குகின்றனர். இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கும் போது காங்கிரஸ் வேடிக்கை பார்க்கும். அந்த கட்சி உதவிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார்.
    • இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    பெங்களூரு

    கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளோம். இந்த பட்டியல் இன்று (நேற்று) அடுத்த சில மணி நேரத்தில் வெளியாகும். உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார். அவர் டெல்லி திரும்பியதும், அவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது அனுபவம் எங்களுக்கு தேவை. அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பார்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு நாங்கள் தொலைபேசி மூலம் பேசி புதிய நபர்களுக்கு வழிவிடுமாறு கூறினோம். அதற்கு அவர், நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கி உள்ளது, அதனால் இன்னொரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என ஈஸ்வரப்பா சூசகமாக தெரிவித்திருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும், பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க உதவி செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என கடந்த மாதம் அவர் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

    ×