search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eshwarappa"

    • பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு.
    • தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவதூறாக பேசினார். இது கார்கேவின் மரியாதையை தூள் தூளாக்கிவிட்டது. யானை அளவு பலம் கொண்ட பிரதமர்மோடியை, மூட்டைப்பூச்சி அளவிலான பிரியங்க் கார்கே விமர்சிப்பது சரியல்ல.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அறிக்கை. பஜ்ரங்தள தடை விவகாரத்தில் காங்கிரஸ்தலைவர்கள் இடையே குழப்பம் உள்ளது. பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு. அதனை பி.எப்.ஐ. அமைப்புடன் ஒப்பிடுவது தவறு. இந்துக்களை ஓரங்கட்டும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. இது அக்கட்சிக்கு பேரழிவாகும்.

    ஜெகதீஷ் ஷெட்டரின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா பற்றி பேசிய ஜெகதீஷ் ஷெட்டரிடம் சுயமரியாதையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் தனது சுயமரியாதையை தேர்தல் போட்டியிடுவதற்காக விற்றுவிட்டார். ஜெகதீஷ் ஷெட்டர் இன்னும் பா.ஜனதாவின் கோட்பாட்டை கைவிடவில்லை. அவரது வீட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. யாரோ ஒருவரின் நடத்தையால் தான் பா.ஜனதாவில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

    டி.கே.சிவக்குமார் என் பின்னால் ஒக்கலிக சமுதாய மக்கள் இருப்பதாக கூறுகிறார். இவரை விட இனவெறி பிடித்த இன்னொருவர் இல்லை. சாதியின் பெயரால் தீ மூட்டும் வேலையில் ஈடுபடுகிறீர்கள். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும். பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய கூடாது என கூறி வீரப்பமொய்லியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்போம் என்ற அறிவிப்பை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி பற்றி மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார்.

    ஹாசன் :

    சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று அவர் ஹாசனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் எங்களை குடும்ப கட்சி என்று குறை கூறுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த கட்சியில் தான் தந்தை, மகன்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர்.

    அந்த கட்சியை நாங்கள் எப்படி கூற வேண்டும் என்று எச்.டி.குமாரசாமி சொல்ல வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க ஹாசனில் போட்டியிட பவானி ரேவண்ணா டிக்கெட் கேட்டார். அப்படி கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஒரே குடும்பத்தினர் இருப்பதால் தான், வேறு முகம் இருக்கட்டும் என சி.எம்.இப்ராகிமை கட்சி தலைவர் பொறுப்பு வழங்கி கட்சியில் வைத்து இருக்கிறார்கள்.

    கனகதாச ஜெயந்தியை அரசு விழாவாகவும், அந்த சமுதாய மக்கள் நலன் காக்க காகினேலே நலவாரியத்தையும் எடியூரப்பா அறிவித்தார். நாங்கள் வாக்கு வங்கிக்காக இவ்வாறு அறிவிக்கவில்லை. கனகதாசரின் சித்தாந்தம் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதுபோல் தான் அனைத்து சமுதாய மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பா.ஜனதா செய்து வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி பற்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார். இதுபோன்று பேசிய பிறகு மல்லிகார்ஜுன கார்கே கட்சி பொறுப்பில் இருப்பது சரியல்ல. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள்.
    • காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.

    சிவமொக்கா :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் நேற்று வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஈஸ்வரப்பா பேசியதாவது:-

    சாலை, சாக்கடை, குடிநீர் வசதிக்காக முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் எங்களிடம் நிவாரணம் பெறும் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றனர். எங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டுகள் தேவை இல்லை. எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள். காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.

    லிங்காயத் உள்ளிட்ட இந்து சமுதாயத்தினருக்கு எடியூரப்பா முன்மாதிரி தலைவர். சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் சென்னபசப்பா இந்து சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடிய வலிமையான தலைவர். பா.ஜனதாவை தவிர வேறு கட்சி மாநிலத்தில் வெற்றி பெற்றால், இந்துக்களுக்கு பிழைப்பு இல்லை என சிலர் கூறி வருகிறார்கள். எனவே கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.

    சிவமொக்காவில் 56 ஆயிரம் முஸ்லிம்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். அவர்களின் ஒரு ஓட்டுக்கூட எங்களுக்கு தேவையில்லை. பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொல்லப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் மவுனமாக இருந்தது. லவ் ஹிகாத் குறித்து புகார் அளிக்க பெண்கள் தயங்குகின்றனர். இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கும் போது காங்கிரஸ் வேடிக்கை பார்க்கும். அந்த கட்சி உதவிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார்.
    • இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    பெங்களூரு

    கர்நாடக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளோம். இந்த பட்டியல் இன்று (நேற்று) அடுத்த சில மணி நேரத்தில் வெளியாகும். உள்துறை மந்திரி அமித்ஷா வெளியூர் பயணத்தில் உள்ளார். அவர் டெல்லி திரும்பியதும், அவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்த பட்டியல் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரது அனுபவம் எங்களுக்கு தேவை. அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பார்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு நாங்கள் தொலைபேசி மூலம் பேசி புதிய நபர்களுக்கு வழிவிடுமாறு கூறினோம். அதற்கு அவர், நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கி உள்ளது, அதனால் இன்னொரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என ஈஸ்வரப்பா சூசகமாக தெரிவித்திருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும், பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க உதவி செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என கடந்த மாதம் அவர் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

    கொரோனா தடுப்பூசி வந்தபோது, அதுகுறித்து காங்கிரசார் தவறான பிரசாரம் செய்தனர். அதை போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும் என்றெல்லாம் கூறினர். இன்று அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள போட்டி போடுகிறார்கள்
    மண்டியா :

    கர்நாடக மேல்-சபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் கிராம ஸ்வராஜ் யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பிரசார கூட்டம் மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துவிட்டார். அத்துடன் பா.ஜனதாவையும் பெரிய கட்சியாக வளர்த்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியை விட பா.ஜனதா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், ஊழலில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி மீது ஒரு ஊழல் புகார் கூட இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவரை யாரும் வரவேற்கவில்லை. அவரை எங்கே ஒரு மூலையில் நிறுத்தி வைத்தனர்.

    ஆனால் மோடி வெளிநாடுகளுக்கு சென்றால், அதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி அவர் நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஆயுதப்படைகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு ஷோபா பேசினார்.

    இதில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பொய் பேசுவதில் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். பொய் பேசுவதற்கு என்று நோபல் பரிசு வழங்கப்பட்டால், அதை சித்தராமையாவுக்கு வழங்கலாம். கொரோனா தடுப்பூசி வந்தபோது, அதுகுறித்து காங்கிரசார் தவறான பிரசாரம் செய்தனர். அதை போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும் என்றெல்லாம் கூறினர். இன்று அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள போட்டி போடுகிறார்கள்" என்றார்.

    கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஜே.டி.எஸ். கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல் மந்திரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

    கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பா.ஜனதாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பா.ஜனதாவின் வகுப்பு வாரியான அரசியலுக்கு முடிவு கட்ட ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ராகுல் காந்தியையும், சித்தராமையாவையும் கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார். அதே போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல் மந்திரியாக ஆக மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேவேகவுடா பிரதமராக இருந்தவர். தான் வகித்த பதவிக்கு ஏற்ப பேச வேண்டும். இந்த தேர்தலில் பாஜக, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றிபெற விடமாட்டோம் என்று அவர் சொல்வது சரியல்ல.

    நீங்கள் முன்பு வெற்றி பெற்ற 2 தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்று பாருங்கள். அதன் பிறகு எங்கள் கட்சி பற்றி அவர் பேசுங்கள். தங்களின் அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 தொகுதிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மறக்கக்கூடாது.

    இந்த தேர்தலில் பாஜக 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. கூட்டணி அமைக்கப்பட்டவுடன் அதை மக்கள் ஒப்புக்கொள்வது இல்லை. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தகராறு போட்டுக் கொள்கிறார்கள்.

    இத்தகையவர்களுக்கு எங்கள் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை காங்கிரசாரும் தோற்கடிப்பார்கள். இதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் போட்டியிட்டால், அதை பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். இதன் மூலம் காங்கிரஸ் எந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை அறிய முடியும்.

    பாஜகவினருக்கு மானம், மரியாதை இல்லை என்று சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். முதலில் அவருக்கு அது இருக்கிறதா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்பி பேசினோம். வறட்சி பாதித்த பகுதிகளில் மந்திரிகள் ஆய்வு நடத்தவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், சித்தராமையா ஆகியோர் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    நாங்கள் 2-வது முறையாக வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் பணிகளை தொடங்கியுள்ளோம். இப்போது தான் மாநில அரசு கண்ணை திறந்துள்ளது. இப்போதாவது மாவட்ட பொறுப்பு மந்திரிகள் வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அரசு சொல்கிறது. ஆனால் இதுவரை அந்த கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதன் மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மத்திய குழு கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்துள்ளது.



    மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், மாநில அரசு தனது சொந்த நிதியில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தி உள்ளது. மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் காகித புலிகளை போன்றவர்கள்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவே இல்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை. ஆனால் பா.ஜனதா மீது காங்கிரசார் புழுதி வாரி இறைக்கிறார்கள். சட்டசபையில் எங்களுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பூத் மட்டத்தில் எங்கள் கட்சி பலமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களின் கூட்டணியால், எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். 20-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும், கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்றும் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லியில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்சியின் மீது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருக்கு, சித்தராமையாவை பிடிக்கவில்லை.

    தன்னை ஆட்சி செய்ய காங்கிரஸ் தலைவர்கள் விடுவதில்லை என்றும், அவர்கள் சொல்படி தான் நடப்பதாகவும் கூறி குமாரசாமி கண்ணீர் வடிக்கிறார். இதுபோன்ற, காரணங்களால் எம்.எல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அதனால் இந்த கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. எப்போது கவிழும் என்றும் சொல்ல முடியாது.

    அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதாவுக்கு வருவார்களா? என்பது தெரியவில்லை. பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

    நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைவரும் டெல்லி வந்துள்ளோம். கட்சியின் தலைமை உத்தரவுப்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் தங்கி இருக்கிறோம். கட்சி தலைமை கூறினால் நாங்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்ல தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
    சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் தெரிவித்துள்ளார். #Eshwarappa #Siddaramaiah
    பெங்களூரு :

    பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சிக்கு சித்தராமையா வருவதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம். சித்தராமையா அவ்வப்போது தனது பேச்சை மாற்றிக்கொள்கிறார். முன்பு, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று அவர் சொன்னார். அந்த முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

    முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று சொன்னார். சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறுகிறார்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

    ஆர்.அசோக் எம்.எல்.ஏ. கூறுகையில், “சித்தராமையா பா.ஜனதாவுக்கு வருகிறாரா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. கடும் எதிரிகளாக இருந்த சித்தராமையாவும், தேவேகவுடாவும் ஒன்று சேர வில்லையா?” என்றார். #Eshwarappa #Siddaramaiah
    ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #TipuJayanti
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா, சுதந்திர போராட்டக்காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.



    ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடக்கிறது. கூட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவோம். திப்பு ஜெயந்தி விழா விஷயத்தில் குமாரசாமிக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.  #Eshwarappa #TipuJayanti
    ×