search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janardhana Reddy"

    • சிபிஐ கைது செய்யப்பட்டதில் இருந்து அரசியல் பணியில் தலையிடாமல் இருந்தார்.
    • கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கர்நாடகா மாநிலத்தின் பிரபல அரசியல் தலைவரான ஜி. ஜனார்த்தன ரெட்டி, தனது கே.ஆர்.பி.பி. கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்துக் கொண்டார்.

    சுரங்க மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜி. ஜனார்த்தன ரெட்டி கடந்த வருடம் பா.ஜனதாவில் இருந்து வெளியேறி கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா (KRPP) என்ற கட்சியை தொடங்கினார். அவர் கடந்த வருடம் நடைபெற்ற சட்டன்ற தேர்தலில் கங்காவதி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் இன்று தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்துள்ளார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த சில கலந்து கொண்டனர்.

    மீண்டும் விட்டிற்கு திரும்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ள ஜனார்த்தன ரெட்டி "அமித் ஷா என்னை டெல்லி அழைத்து என்னிடம், பா.ஜனதாவுக்கு கே.ஆர்.பி.பி. வெளியில் இருந்து ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கு பதிலாக பா.ஜனதாவில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்துள்ளேன்" என்றார்.

    கர்நாடகா மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையின் கீழ் மற்ற தலைவர்களோடு இணைந்து சாதாரண தொண்டர் போன்று பணியாற்றிவேன். எந்தவொரு நிபந்தனை மற்றும் எதிர்பார்ப்புடன் இங்கு வரவில்லை. எந்தவொரு பொறுப்பு கொடுத்தாலும், அந்த வேலையை நேர்மையாக செய்வேன்.

    என்னுடைய ரத்தத்தில் எப்போதும் பா.ஜனதா உள்ளது. ஆனால் சில காரணங்களுக்கான நான் பா.ஜனதாவில் இருந்து வெளியேறினேன். தற்போது மீண்டும் தாய் மடிக்கு திரும்பியதாக உணர்கிறேன். என்னுடைய சகோதரர்கள் இங்கு இருப்பதாக பார்க்கிறேன். 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதாக நான் பார்க்கவில்லை" என்றார்.

    சுமார் 13 வருடங்களுக்கு முன் சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அப்போதில் இருந்து அரசியலில் இருந்து ஒதுங்கிருந்தார். 2018 சட்டமன்ற தேர்தலின்போது தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீராமுலுக்காக பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கி எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நீதிமன்றம் கடப்பா, அனந்த்புர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதாவில் ஜனார்த்தன ரெட்டியை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
    • கங்காவதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் முறையாக தென்னிந்தியாவில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அப்போது சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. அதாவது ஆட்சி அமைக்க 114 இடங்கள் தேவையாக இருந்தது. ஆனால் பா.ஜனதா 110 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருந்தது. பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

    சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதில் முக்கியமாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் பல்லாரியில் நடந்த கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவும் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து, ஜனார்த்தன ரெட்டி பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார்.

    சிறையில் இருந்து வெளியே வந்தாலும் பல்லாரிக்கு செல்வதற்கு ஜனார்த்தன ரெட்டிக்கு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் தான் பல்லாரிக்கு அவர் சென்று வருகிறார். அரசியலில் ஈடுபடாமலும் அவர் ஒதுங்கி இருந்து வருகிறார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட ஜனார்த்தன ரெட்டி முடிவு செய்தார்.

    இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொப்பல் மாவட்டம் கங்காவதியில் புதிய வீட்டை வாங்கி அவர் குடியேறினார். பா.ஜனதாவில் ஜனார்த்தன ரெட்டியை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீதான ஈர்ப்பால் பா.ஜனதாவில் சேர்ந்தேன். தற்போது பா.ஜனதாவுக்கும், எனக்கும் இருந்த உறவு முறிந்து விட்டது. மாநிலத்தில் அடுத்த சட்டசபைக்கு தயாராகும் விதமாக 'கல்யாண ராஜ்ய பிரகதி' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளேன். நான் எந்த ஒரு புதிய வேலையை தொடங்கினாலும், அதில் வெற்றி பெற்றிருக்கிறேன். வரும் காலங்களில் சாதி, மதம், பிரிவினை வாதத்தால் யாரும் வெற்றி பெற முடியாது.

    பசவண்ணர் கூறிய தத்துவங்களின்படி அனைவரும் சமமானவர்கள். சாதி, மதத்தால் அரசியல் செய்ய முடியாது என்பதாலும், கர்நாடகத்தின் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் வைத்து கொண்டு 'கல்யாண ராஜ்ய பிரகதி' கட்சியை தொடங்கி உள்ளேன். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு எதிராகவே சிலர் சதி செய்தார்கள். கனிம, சுரங்க முறைகேட்டில் நான் ஈடுபடவில்லை. என்னை சிக்க வைத்தனர்.

    அழுத்தம் கொடுக்க மாட்டேன்

    நான் கஷ்ட காலத்தில் இருந்த போது முன்னாள் முதல்-மந்திரிகளான எடியூரப்பாவும், ஜெகதீஷ் ஷெட்டரும் மட்டும் ஆதரவாக இருந்தனர். வேறு யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை. புதிய கட்சிக்கு இன்னும் 15 நாட்களில் கொடி, சின்னம் கிடைத்து விடும். கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியிலேயே நான் போட்டியிட உள்ளேன். வாக்காளர் பட்டியலில் எனது பெயரை சேர்ப்பேன். மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    மந்திரி ஸ்ரீராமுலு எனது கட்சியில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். ஸ்ரீராமுலுக்கு பா.ஜனதா கட்சி மந்திரி பதவி உள்ளிட்ட உயர் பதவிகளை வழங்கி உள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்தாலும், பா.ஜனதாவில் இருந்து விலகி எனது கட்சியில் சேரும்படி ஸ்ரீராமுலுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டேன். பா.ஜனதாவில் இருக்கும் எனது சகோதரர்கள் 2 பேரையும் பலவந்தமாக என்னுடைய கட்சிக்கு வரும்படி அழைக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #JanardhanaReddy #BriberyCase
    பெங்களூரு:

    பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி இருந்தது.

    அந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர் மறுநாள் (11-ந் தேதி) நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறி ஜனார்த்தனரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜனார்த்தனரெட்டி சார்பில், பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ.2 லட்சம் பிணைத்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 
    கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். #JanardhanReddy #JanardhanReddyArrest
    பெங்களூரு:

    பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #JanardhanReddy #JanardhanReddyArrest
    ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #TipuJayanti
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா, சுதந்திர போராட்டக்காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.



    ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடக்கிறது. கூட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவோம். திப்பு ஜெயந்தி விழா விஷயத்தில் குமாரசாமிக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.  #Eshwarappa #TipuJayanti
    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். #Karnataka #JanardhanaReddy
    பெங்களூரு:

    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

    இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

    ஜனார்த்தன ரெட்டி, உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

    இதற்கிடையில், நிதி நிறுவன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
    கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி தொடர்பான ஆடியோ ஆதாரத்தை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. #KarnataElection2018 #Congress #AudioRelease
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை இன்று வெளியிட்டது.

    அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், பணம், மந்திரி பதவி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்திக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என பாஜக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். #KarnataElection2018 #Congress #AudioRelease
    ×