search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்"

    • நாளை மறுநாள் ஆவணி முதல் ஞாயிறு என்பதை முன்னிட்டு ஏற்பாடு
    • நாகராஜா நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவில் நாக தோஷம் தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் வழி பட்டால் திருமணங்கள் கைகூடும் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குமரி மாவட்ட மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் புண்ணி யங்கள் கிடைக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு நாகராஜா நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிக மாக இருக்கும்.

    எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகம் மேற் கொண்டு வருகிறது.கோவிலில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் நாகர் சிலைகளை சுத்தம் செய்யும் பணி, வர்ணங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டு உள்ளது. ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட் களே உள்ள நிலை யில் முன்னேற்பாடு பணி களை தீவிரமாக நடந்து வருகிறது. ஆவணி ஞாயிற் றுக்கிழமையான நாளை மறுநாள் 21-ந்தேதி நாக ராஜா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    21-ந்தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்படு கிறது.இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடக்கிறது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் கோவில் மேலா ளர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பக்தர்களுக்கு வசதியாக குடிநீர் வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அபிஷேக அர்ச்சனை கட்டணமாக ரூ.400 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

    இதில் ஒரு லிட்டர் பால் பாயாசம் மற்றும் பாத்திரம் இலவசமாக வழங்கப்படும். தேங்காய் பழம் பிரசாதங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
    • குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெ.ஜெ.நகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று காலை முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தி வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் வீரபத்திரசாமி சரித்திர நாடகம் நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது. இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும் போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது எனவும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது.
    • மூவர்கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சோமவாரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வடபுறம் உள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறத்தில் திண்ணை மண்டபம் அமைந்துள்ளது.

    வடக்கு பிரகாரத்தில் உள்ள வாயில் நுழையும் போது கல்யாண மண்டபம் அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த மூவர் கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களிலும் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் நடுவிலும் சிற்பங்கள் காணப்படுகிறது. கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கருவறை மண்டபத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் காவல் தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான தேரை இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது தேர்திருவீதி உலா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • யார் அவர்? என போலீஸ் விசாரணை
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    கன்னியாகுமரி:

    ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்து குவிய தொடங்கினார்கள்.

    இதனால் கன்னியாகுமரி யில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்த நிலையில்கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் "திடீர்"என்று மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராட வந்த பக்தரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×