என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசைக்கு புனித நீராட வந்த பக்தர் நடுரோட்டில் சுருண்டு விழுந்து பலி
- யார் அவர்? என போலீஸ் விசாரணை
- ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
கன்னியாகுமரி:
ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்து குவிய தொடங்கினார்கள்.
இதனால் கன்னியாகுமரி யில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்த நிலையில்கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் "திடீர்"என்று மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராட வந்த பக்தரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






