search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்காணல்"

    • 75 பேர் கலந்து கொண்டனர்
    • 10-ந் தேதி வரை நடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜா, ஆற் காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, கலவை ஆகிய வருவாய் வட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் விவரம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும்பட்டியல் மற்றும் நேரிடையாக அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தகுதியான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரப்பெற்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து இவர்களுக்கான நேர்காணல் அந் தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நேற்று நேர் காணல் தாசில்தார் நடராஜன் தலைமையில் நடந்தது. சுமார் 75 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    இந்த நேர்காணல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தாசில்தார் ரேவதி, மண்டல துணை தாசில்தார் விஜயசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • விண்ணப்பங்கள் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்தது.
    • தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

    தருமபுரி,

    தி.மு.க.வின் சார்பு அணிகளின் மாவட்டத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்தது.

    அதன் அடிப்படையில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கான விருப்பமனுக்கள் வழங்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட அணிகளின் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

    இந்த நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் எத்தனை ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராக உள்ளீர்கள்? கழகம் அறிவித்துள்ள எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள்? எத்தனை முறை சிறை சென்றீர்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தெற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த துணை சேர்மன் பிரபாகரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நேர்காணலில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது
    • இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

    ஆலங்குடி:

    ஆலங்குடி தாலுக்காவில் 9 கிராம உதவியாளர் பணி இடத்திற்கான நேர்காணல் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த 04-12-2022 அன்று போட்டித் தேர்வு நடைபெற்றது. உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 689 பேரில் நேற்று முதல் நாள் 80 பேருக்கு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களை ஆலங்குடி வட்டாட்சி யர் செந்தில்நாயகி தலைமையில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் நட த்தும் அலுவலர் பழனியப்பன் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரை கண்ணு மற்றும் அலுவலர்கள் நேர்காணலில் உடனிருந்தனர். மேலும் நேற்றிலிருந்து நேர்காணலானது தொடர்ந்து சுமார் 9 நாட்க ள் நடைபெற்று விரைவில் பரீசீலனை செய்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    • தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இது குறித்து கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம்,திருப்பூர்,ஊத்துக்குளி,அவிநாசி, மடத்துக்குளம், தாராபுரம்,உடுமலை, காங்கேயம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் என மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்தப்பணிகளுக்கு 8222 விற்பனையாளர்,1429 கட்டுனர்கள் என மொத்தம் 9651 பேர் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 28 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விண்ணப்பதாரரின் கல்வி உள்ளிட்ட சான்றுகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி 1400 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் இந்த நேர்காணல் 22.12.22 வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 10 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது.
    • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண்.240-ல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 10 பணியிடங்களை மாவட்ட நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது.

    இதற்காக வருகிற 13-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண்.240-ல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு https://tiruppur.nic.in/notice-category/recruitment/ என்ற இணையதள முகவரியிலும், 0421 2478503 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை ‘ஹைலைட்' செய்யுங்கள்.
    • நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.

    தனியார் துறைகளில், இப்போது புதுமையான நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. நமக்கு பழக்கமான நேர்காணல் முறையிலும், பழக்கமில்லாத புதுமையான நேர்காணல் முறையிலும் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கு பிறகுதான் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தவகையில், தனியார் துறைகளில், சமீபகாலமாக புழக்கத்தில் இருக்கும் ஒருசில நேர்காணல் முறைகளையும், அதில் கலந்து கொள்ள ஆயத்தமாகும் முறைகளையும் இந்த கட்டுரையில் படிக்கலாம்.

    சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த 'ஸ்க்ரீனிங் இன்டர்வியூ'வின் நோக்கம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவியும் சமயத்தில், உங்களின் 'விண்ணப்பத்தை' மிக ஆழமாக ஆராய்வார்கள். அதில் சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. 'ஓவர் குவாலிபைட்' ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த நேர்காணல்.

    விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை 'ஹைலைட்' செய்யுங்கள். இந்த இன்டர்வியூவில் சுற்றி வளைக்காமல் நேரடியான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும். தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.

    * டைரக்டிவ் ஸ்டைல் நேர்காணல்

    இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை இது. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்கு கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

    கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    * நடத்தை நேர்காணல்

    நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதை விட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். அதனால் நீங்கள் நீங்களாக இருங்கள். படிக்கும்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக்கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்தோ கூட இருக்கலாம். உங்களின் அனுபவங்களை 'வளவள' என்று கூறாமல், இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.

    * உணவு இடைவேளை நேர்காணல்

    நேர்காணல் செய்பவர் உங்களை சாப்பிட அழைத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும். மேலும், பல தனிப்பட்ட விஷயங்களைப் பேசவும் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரை தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, நடத்தப்படும் 'மீல் டைம் இன்டர்வியூக்கள்' கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்.

    இந்த வகை நேர்காணலின்போது உங்களை ஒரு விருந்தினராக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது. உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், 'லைட்'டாக ஆர்டர் செய்யவும். உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

    * மனவலிமை நேர்காணல்

    உங்களின் பொறுமையை சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களை செய்யச் சொல்வது என கிட்டத்தட்ட ஒரு கல்லூரி 'ராகிங்' போன்றது இந்த இன்டர்வியூ. எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம்.

    இந்த இண்டர்வியூவில் கையாளும் விஷயங்கள், ஒரு விளையாட்டுதானே தவிர, பெர்ஷனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.

    * இன்பர்மேஷனல் நேர்காணல்

    தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள். உங்களுக்கு குறிப்பிட்ட அந்தத் துறையை பற்றி என்ன தெரியும், அந்தத் துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது. இந்த நேர்காணலுக்கு செல்லும் போது துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே 'ஹோம் வொர்க்' செய்துகொண்டுபோவது நல்லது.

    • ‘காபி இன்டர்வியூ’ என்றால், முதல் கட்ட தேர்வு என்றே பொருள்.
    • உங்களுக்கான தகுந்த மார்க் போடுவதுதான், இதன் அடிப்படை.

    பழக்கமான நபர்களே, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருந்தாலும், நேர்காணலுக்கான விதிமுறைகளை கடைபிடியுங்கள். இரண்டு பிரதி ரெஸ்யூம் அவசியம். கூடவே, பி.டி.எப்.ரெஸ்யூமும் மொபையில் இருக்கட்டும்.

    பெரும்பாலும் 'காபி இன்டர்வியூ' என்றால், முதல் கட்ட தேர்வு என்றே பொருள். இன்று முக்கிய பொறுப்புகளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க, ரொம்பவும் இயல்பாக சந்தித்து உரையாட விரும்புவதன் தாக்கமாகவே, இந்த காபி இன்டர்வியூ நுழைந்திருக்கிறது. பெரும்பாலும் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் உயர்ந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்போதும், பழைய குழுவில் இருந்து புதிய குழுவிற்கு மாற்றம் செய்யப்படும்போதும், இந்த காபி நேர்காணல் நிகழும். ஒரு கப் காபி குடித்துக்கொண்டே, உங்களின் நிறை-குறைகளை ஆராய்ந்து, உங்களுக்கான தகுந்த மார்க் போடுவதுதான், இதன் அடிப்படை. சரி, இதில் எப்படி நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீங்கள், காபி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், பதற்றப்படாமல் அணுகுங்கள். வழக்கமான நேர்காணல் இல்லை என்பதால் பணியாற்றும் நிறுவனம் குறித்து பேச்சின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுப் பேசவேண்டியதில்லை. எனவே சீரியசாக இல்லாமல், ரொம்ப இயல்பாக நடந்து கொள்ளுங்கள். சாதாரண ஒரு கப் காபிதான். ஆனால் அதனை உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாக மாற்றிக்கொள்வது உங்கள் 'யுனிக்' சாமர்த்தியம்.

    பார்மல் உடையோ இல்லை கேஷ்வல் உடையோ.. உங்களுக்கு பொருத்தமாக இருப்பதை கொண்டு, உங்களை கனகச்சிதமாக காட்டிக்கொள்ளுங்கள். அவர்களின் தேவை பற்றி அறிவதோடு, புதிய பணிக் குழுவில் உங்கள் பங்கு என்ன?, கம்பெனியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என விவேகத்துடன் தயாரானால் அட்டகாசம்.

    வழக்கமான நேர்காணலில் கேட்கமுடியாத கேள்விகளை காபி இன்டர்வியூவில் கேட்க முயற்சிக்கலாம். அதற்கும் தயாராக இருங்கள். பிரயோஜனமாக, நிறுவனத்தைப் பற்றி, நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள நபர்களைக் குறித்து கேட்டால், மனதில் தோன்றிய உண்மைகளை மறைக்காமல் கூறுங்கள். இந்த மாதிரியான கருத்துகளை கேட்பதற்குகூட, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருக்கலாம்.

    பழக்கமான நபர்களே, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருந்தாலும், நேர்காணலுக்கான விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். இரண்டு பிரதி ரெஸ்யூம் அவசியம். கூடவே, பி.டி.எப்.ரெஸ்யூமும் கைவசம் இருக்கட்டும்.

    நேர்காணல் செய்பவர்களுக்கு முன்னரே காபி ஷாப்பிற்கு வந்துவிட்டால், உடனே காபியை ஆர்டர் செய்ய வெய்ட்டரைத் தேடக்கூடாது. காபியும் கையுமாக, நேர்காணல் செய்பவருடன் அறிமுகமாவது சங்கடமில்லையா?. கூடவே, நேர்காணலின் கதாநாயகன் அவர் என்பதால், அவரது வருகைக்கு பிறகு உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்.

    அடுத்ததாக வேலை உங்களுக்கு பொருத்தமாக இல்லையென்றால், உங்கள் எதிர்பார்ப்பை அவரிடம் இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம். இதன்மூலம் நேர்மையான மனிதர் என்ற இமேஜ் அவர் மனதில் உங்களுக்கு கிடைக்கலாம்.

    • பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.
    • விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான நோ்காணல் வரும் அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு, அறை எண்-240, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.இதுதொடா்பான விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஒய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலில் பங்கு பெறாதவர்கள், தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் சேலம் மாவட்ட கருவூல அலகில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • வருகின்ற 15-ந் தேதிக்குள் நேர்காணல் பணியை விரைந்து முடித்துவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் அறிவிப்பாணைப்படி, 2022-ம் ஆண்டிற்கான ஓய்வூதி யதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் சேலம் மாவட்ட கருவூல அலகில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 2 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேர்காணலில் 65 சதவீத ஓய்வூதியதாரர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.மீதமுள்ள ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வருகின்ற 15-ந் தேதிக்குள் நேர்காணல் பணியை விரைந்து முடித்துவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நேர்காணல் முடிக்காத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் நவம்பர் மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.எனவே சேலம் மாவட்ட கருவூல அலகில் (மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில்) ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் நேர்காணல் பணியை விரைந்து முடித்திட வேண்டும். இதன்மூலம் ஓய்வூதியம் நிறுத்தப்படுதல் போன்ற அசவுகரியங்களை தவிர்க்குமாறும், நேர்காணல் பணியை முடித்திட ஒத்துழைக்கு மாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார். 

    • பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி :

    திருத்துறைப்பூண்டி தாலுகா பாமினி ஊராட்சி, அத்திமடை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இம்முகாமில் பாமினி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் துறைகளின் நலதிட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெறுவதற்கு இம்முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில்; வீடு கட்டுவதற்கான ஆணையும்; வருவாய்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு உட்பிரிவு பட்டாவும், 11 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 19 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 84 நபர்களுக்கு ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாவும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பேட்டரி தெளிப்பானும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 05 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 250 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா, தாசில்தார் அலெக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×