search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை ஊழியர்களுக்கான நேர்காணல்
    X

    ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்ற காட்சி.

    ரேஷன் கடை ஊழியர்களுக்கான நேர்காணல்

    • 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இது குறித்து கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம்,திருப்பூர்,ஊத்துக்குளி,அவிநாசி, மடத்துக்குளம், தாராபுரம்,உடுமலை, காங்கேயம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் என மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்தப்பணிகளுக்கு 8222 விற்பனையாளர்,1429 கட்டுனர்கள் என மொத்தம் 9651 பேர் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 28 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விண்ணப்பதாரரின் கல்வி உள்ளிட்ட சான்றுகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி 1400 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் இந்த நேர்காணல் 22.12.22 வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×