search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative Society"

    • ராமநாதபுரத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது.
    • சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கமும், சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், மேளாளர் கண்ணன், பொது மேலாளர் போஸ் உள்ளிட்டோரிடம் கூட்டுறவு சங்கங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், இணைப்பதிவாளர் மனோகரன் ஆகியோர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் சிறந்த நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடையத்தை அச்சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன் மற்றும் செயலாளர் முகமது யூசுப் பெற்றுக்கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் மேளா நாளை முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
    • கால்நடை களின் பராமரிப்புக்காக மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 என்ற அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.300 கோடி பயிர்க்கடனும், ரூ.200 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 40 ஆயிரத்து 180 விவசாயிகளுக்கு ரூ.248.16 கோடி பயிர்க்கடனும், 6 ஆயிரத்து 153 விவசாயிகளுக்கு ரூ.88.75 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 6.2.2023 முதல் 10.2.2023 வரை சிறப்பு கடன் மேளாக்கள் நடத்தப்பட உள்ளது.

    பயனாளிகளுக்கு ஒரு ஏக்கருக்கு பருத்தி ரூ.22 ஆயிரத்து 50, மிளகாய் ரூ.27ஆயிரத்து 950, தென்னை ரூ.22 ஆயிரம், வாழை ரூ.40 ஆயிரத்து 550, மக்காச்சோளம் ரூ.18 ஆயிரத்து 850, நிலக்கடலை ரூ.21 ஆயிரத்து700 என்ற அளவில் வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்படும். விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடை களின் பராமரிப்புக்காக மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 என்ற அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    அனைத்து விவசாயி களும் இந்த சிறப்பு கடன் மேளாவில் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்புக் கடன் பெற்றுப் பயனடையலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    பரமக்குடி வட்டாரம் 88703 52220, போகலூர் வட்டாரம் 75503 43249, கமுதி வட்டாரம் 77081 85419, கடலாடி வட்டாரம் 94435 76159, நயினார்கோவில் வட்டாரம் 90951 14291,முதுகுளத்தூர் வட்டாரம் 94872 13528, ராமநாதபுரம் வட்டாரம் 99522 06840, மண்டபம் வட்டாரம் 94430 65821, திருப்புல்லாணி வட்டாரம் 83001 71459, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் 88386 68780, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சரக துணைப்பதிவாளர் 73387 21602.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×