search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல்
    X

    ஆலங்குடியில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல்

    • கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது
    • இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

    ஆலங்குடி:

    ஆலங்குடி தாலுக்காவில் 9 கிராம உதவியாளர் பணி இடத்திற்கான நேர்காணல் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த 04-12-2022 அன்று போட்டித் தேர்வு நடைபெற்றது. உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 689 பேரில் நேற்று முதல் நாள் 80 பேருக்கு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களை ஆலங்குடி வட்டாட்சி யர் செந்தில்நாயகி தலைமையில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் நட த்தும் அலுவலர் பழனியப்பன் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரை கண்ணு மற்றும் அலுவலர்கள் நேர்காணலில் உடனிருந்தனர். மேலும் நேற்றிலிருந்து நேர்காணலானது தொடர்ந்து சுமார் 9 நாட்க ள் நடைபெற்று விரைவில் பரீசீலனை செய்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    Next Story
    ×