search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர்"

    • மங்கள இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது.
    • சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

    29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட விழாவும், 4-ந் தேதி சுவாமி -அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடந்தது. நேற்று முன்தினம் சவுந்தர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கள இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. அப்போது சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

    பணகுடி ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழா நாட்களில் கும்பாபிஷேக பூஜை, சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 3-ந்தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ம் திருவிழா அன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

    • 29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தாமிரபரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 6-ந்தேதி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

    வருகிற 4-ந் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விசேஷ தீபாராதனைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்கள்.

    5-ந் தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • தை அமாவாசையையொட்டி இன்று பத்ர தீபம் ஏற்றப்படுகிறது.
    • 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீப (10 ஆயிரம் தீபம்) திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர வழிபாடு மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், திருமூல மகாலிங்கம், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று மாலை 6.45 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் மேளதாளம் முழங்க மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு அந்த தீபத்திலிருந்து தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்க விளக்குக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், 11 மணிக்கு ஊஞ்சல்மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளளும், 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கோவில் மேல் பிரகாரத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பத்ர தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தை மாதம் கரிநாளில் நெல்லையப்பர், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாறு நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்பாள், "கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது" எனத் தடுக்கிறார். ஆனால் தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும் போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, "திருமுருகன் பூண்டி பதிகம்" பாடிய பின் கோவில் நடை திறந்துள்ளதாக நிகழ்வு அமைந்துள்ளது.

    அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், கோவிலில் இருந்து புறப்பட்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி கோவிலுக்கு திரும்பினார்.

    சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த "பதிகம்" பாடி, ஊடல் தீர்த்து வைத்தப் பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.
    • ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக தாமிர சபை மண்டபத்தில் நேற்று இரவு சுவாமி எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 26-ந்தேதி சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு காசுமாலை, பவளமாலை, காலில் கொலுசு, தலையில் சடை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    தொடா்ந்து சிவபூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ, வஸ்திரம் உள்ளிட்ட 11 தாம்பூல தட்டுகளுடன் பஞ்ச வாத்தியங்கள் மற்றும் நாதஸ்வரம், மேளம் இசைக்க அம்பாள் சன்னதியில் இருந்து காந்திமதி அம்பாள் கையில் தாமரைப்பூவும், மலர் கூடையையும் ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி மகாமண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அா்ச்சகா், அம்பாள்- சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் தூபம் இடுதல், பூக்களால் அா்ச்சனை செய்தல் என காந்திமதி அம்பாள், சுவாமி நெல்லையப்பருக்கு சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கும்- அம்பாளுக்கும் சோடஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பஞ்ச புராணம் பாடப்பட்டது. நிறைவாக சுவாமிக்கு மூலஸ்தானத்தில் 5 பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தியும், அம்பாளுக்கு 1 பஞ்ச தட்டு ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. பூஜைகள் முடிந்தபின் அம்பாள் ஊா்வலமாக அம்மன் சன்னதிக்கு எழுந்தருளினாா். இந்நிகழ்வு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். நேற்று நள்ளிரவில் காந்திமதி அம்பாள் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தார்.

    இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லைப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், காலை 9-30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதிஉலாவும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஊஞ்சல் விழா நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கோவில் யானை காந்திமதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது.

    வருகிற 21-ந்தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.

    22-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையப்பர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது.

    23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • 22-ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
    • 23-ந்தேதி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நெல்லை, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஆவணி மூலத்திருவிழா, பங்குனி உத்திரத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையிலும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். 22-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பா நதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. ஐப்பசி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
    • கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 22- ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், 23-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதமாக கால்கோள் நடும்விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் திருக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் திருக்கால் கோவிலை சுற்றி வலம் வந்து, காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மண்டபத்தில் கால்நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 29-ந்தேதி சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.
    • வருகிற 5-ந்தேதி கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதாவது கீரனூரில் கருவூர் சித்தர் சிவாலயங்களுக்கு சென்று நல்வரங்களை கேட்டு பெற்றார். இவ்வாறு நெல்லைக்கு வந்து சேர்ந்த கருவூர் சித்தர், நெல்லையப்பரை தரிசிக்க வந்தபோது நெல்லையப்பரிடம் இருந்து மறுமொழி கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் சாபமிட்டு விட்டு மானூருக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நெல்லையப்பர் ஆவணி மூல நாளில் மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்தார்.

    இந்த வரலாற்றுக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 4-வது நாளான 29-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.

    3-ந்தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி இரவு 1 மணி அளவில் சந்திரசேகரர் சுவாமி, பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகத்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

    அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் 5-ந்தேதி காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 9-ம் திருநாள் அன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

    நேற்று காலை தீர்த்தவரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு பச்சை புடவை கட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×