search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்"

    • கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கோபி,

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படுகிறது.

    இவ்விரு கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், செங்கரை, மோதூர், பிள்ளையார் கோவில் துறை,வாணிபுத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தங்கள் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கொண்டு செல்ல போதுமான வாகன வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கின்றன.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் லாரிகள் மூலம் பாதுகாப்பான இடத்தில் வைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வேண்டும்.
    • சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் மணிமொழியன், வெள்ளாம்பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ரத்தின வேலவன், ராமலிங்கம், சீராலூர் தனபால், பூதலூர் சுந்தரவடிவேல், தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, விடுதலை சுடர், பழ. ராஜேந்திரன், தென்னவன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடியில் திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை தொடர் வேளாண் தொழில் பெருந்தடம் உருவாக்கப் போவதாக அறிவித்தது.

    பெரும் தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை மண்டலமாக தொழில் பேட்டைகளின் தொடர் சங்கியாக இது அமைக்கப்பட கூடாது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்ட ஏற்பாட்டிற்கு ஊரு நேரா வண்ணம் உணவுத்துறை சார்ந்த சிறுகுறு தொழில்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2600 விலை தருகிறது. அதுபோல் தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.

    2 thousand 500 per quintal should be provided for paddy - Maniarasan interviewமேலும் இதர வேளாண்மை பொருட்களுக்கு சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    நியாய விலை கடைகளில் உயிர்ம வேளாண் உற்பத்தி பொருட்கள், அரிசி தொடங்கி சிறு தானியங்கள், காய்கறிகள் என பலவும் மானிய விலையில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    உயிர்ம வேளாண்மை நிலங்களுக்கு இயற்கை எரு கிடைக்க கிடை போட அரசு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்ககுடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் 123 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய கரும்பு பாக்கி தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்.

    தவறான வங்கி கடன்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டில் வெளிப்படை தன்மை தேவை. செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 19,122 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2022-23 கொள்முதல் பருவத்தில், இதுவரை 19 ஆயிரத்து122 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான தொகை ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,537 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர், இலவச அலைபேசி எண். 1077 துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் விருதுநகர் தொலைபேசி எண். 04562-252607 ஆகிய எண்ணிற்கு புகார் செய்யலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
    • 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

    அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு.

    அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.

    பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

    இதைத்தொடர்ந்து 2000 டன் நெல் வீதம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திறந்து வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே.செழியன் திறந்து வைத்தார்.

    கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ஆதி மூலம், குமார், சுரேஷ், கனகராஜ், கணேசன், தமிழ்செல்வன், முருகேசன், ஜெயராமன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் ராம கோவிந்தன், சிக்கந்தர், ராமு ,சிவ சக்திவேல்,தர்மர், விமல சேகர், முத்துசாமி, சதிஷ்குமார், செந்தில், பழனிவேல் முருகேசன், தண்டபாணி, மகேஸ்வரி, சேட்டு, கருணாநிதி உள்ளிட்டோரும், கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    • அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
    • நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 28 ஆயிரத்து 865 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    நடப்பாண்டில் இதுவரை 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா அடங்கல், பட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றின் 2 பிரதிகளோடு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.


    • நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
    • சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    இதனைத்தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் அரக்கோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பனிப்பொழிவு இருப்பதால், காய வைத்தாலும் நெல்லில் ஈரப்பதம் குறைவதில்லை.
    • 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூா்:

    டெல்டா மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பெய்த பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் நெல், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிா்கள் பாதிக்கப்பட்டன.

    அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிா்கள் சாய்ந்துவிட்டதாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் ஈரப்பதம் அதிகமாகிவிட்ட தாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

    எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

    இதுதொடா்பாக மத்திய அரசுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டு ப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அலுவலா்கள் பிரபாகரன் தலைமையில் தொழில்நுட்ப அலுவலா்கள் யூனுஸ், போயா ஆகியோா் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று மாலை ஆய்வு செய்தனா்.

    முதலில் தஞ்சாவூா் மாரியம்மன்கோவில் அருகேயுள்ள அருள்மொழி ப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் குவிய ல்களில் நெல் மணிகளை அள்ளி, எந்த அளவுக்கு ஈரப்பதம் இருக்கிறது என்பதைப் பாா்த்தனா்.

    மேலும், ஈரப்பதம் கணக்கிடும் கருவியிலும் சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகளை வைத்து பரிசோதித்தனா். இதன்மூலம் கிடைத்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனா்.

    அப்போது, தொடா்ந்து பனிப்பொழிவு இருப்பதால், காய வைத்தாலும் நெல்லில் ஈரப்பதம் குறைவதில்லை என்றும், அதனால், நீண்ட நாள்களாக கொள்முதல் நிலையத்திலேயே காத்திருப்ப தாகவும், எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் மத்தியக் குழுவினரிடம் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், புலவன்காடு வி. மாரியப்பன் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

    இதேபோல, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரியும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பது குறித்து மத்தியக் குழுவினரிடம் விளக்கிக் கூறினா்.

    இதைத் தொடா்ந்து, ஒரத்தநாடு வட்டத்திலுள்ள பாப்பாநாடு, பட்டுக்கோ ட்டை வட்டத்திலுள்ள அலிவலம், பில்லங்குழி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

    மத்தியக் குழுவினரின் ஆய்வு குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது :-

    ஒவ்வொரு இடத்திலும் மத்தியக் குழுவினா் மூன்று மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்தனா். ஆய்வு அறிக்கைகளை ஒருங்கிணைத்து, தலைமை யகத்துக்கு அனுப்பிவைப்பா். இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

    • சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன
    • நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • எதிர்பாராத பருவம் தவறிய தொடர் மழையால் சாகுபடி பயிர்கள் கடும் சேதம்.
    • 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இன்று அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவரிடம்,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    காவிரிபாசன பகுதியில் சம்பா தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுமையாக முடிந்து நெல் அறுவடை தொடங்கிய நிலையில் எதிர்பாராத பருவம் தவறிய தொடர் பெரு மழையால் சாகுபடி பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

    அறுவடை முடிந்தும் வரப்புகளிலும் நெல் தரிசு நிலத்திலும் ஊடு பயிராக வளர்ந்த உளுந்து, பாசிப்பயிர், நிலக்கடலை மற்றும் புஞ்சை தானிய பயிர்களும் சேதமடைந்துள்ளன.

    இதனால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழு இழப்பீட்டு தொகை கிடைப்பதை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    தொடர்ந்து பனிப்பொழிவு மற்றும் பெரும் மழையின் காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்ளுதல் நிலையங்களில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நகரச் செயலாளர் ராஜாராமன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ராஜமாணிக்கம், ராமலிங்கம், திருநாவுக்கரசு, உத்திராபதி, ராம்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

    • பிள்ளபாளையத்தில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது
    • இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது

    கரூர்:

    பிள்ளபாளையம் கிராமத்தில் நெல் வயல்களில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி துரிதமாக நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிள்ளபாளையம் கிராம பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது.

    இதன் மூலம் நெல் வயல்களில் நெற்கதிர்கள் வளர்ச்சியடைந்து முதிர்ந்தன. தற்போது இயந்திரம் மூலம் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


    ×