search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் மூட்டைகள் தேக்கம்
    X

    நெல் மூட்டைகள் தேக்கம்

    • கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கோபி,

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படுகிறது.

    இவ்விரு கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், செங்கரை, மோதூர், பிள்ளையார் கோவில் துறை,வாணிபுத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தங்கள் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கொண்டு செல்ல போதுமான வாகன வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கின்றன.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் லாரிகள் மூலம் பாதுகாப்பான இடத்தில் வைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×