search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Coaches"

    • ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரெயில் பெட்டிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • பாடாவதியான ரெயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், ஏர்வாடி, திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை, உப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக தலங்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கானோர் வேண்டுதலுக் காக வருகின்றனர். இது தவிர ஏராளமான வெளி நாட்டினர் ராமேசுவரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்பி தேர்வு செய்கின்றனர். ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலை யம் வழியாக சென்னை, கோவை, திருப்பதி, போன்ற நகரங்களுக்கு முன்பதிவு செய்து பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகள் எஸ்-1 முதல் எஸ் 13 வரை இணைக்கப் பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ராமேசு வரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கிழிந்த இருக்கையில் தையல் போடப்பட்டு உள்ளது. தரை தளம், கழிப்பறைகள் படுமோசமாக உள்ளது. மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டியில் கதவுகளில் உள்ள இடைவெளியில் குளிர் காற்று வெளியே செல்வதால் பெட்டிக்குள் வெப்பகாற்று ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதியில்லை. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளிர் சாதன ெரயில் பெட்டிக்குள் சென்றால் அனல் காற்று தான் வீசுகிறது. தரை தளம் படு மோசமாக உள்ளது. முன்பதிவு செய்து செல்வதை விட ஜெனரல் பெட்டியில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது.

    கழிப்பறையில் சோப், பேப்பர் போன்றவைகளை காண முடியவில்லை. ராமேசுவரம் வரும் யாத்ரீகர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு பாடா வதியான ெரயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

    ×