search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரஜ் சோப்ரா"

    • ஈட்டி எறிதல் தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
    • ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

    கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.

    இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் ௧,433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

    இதையடுத்து, உலக தடகள வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா.

    • தோஹா டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
    • நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

    இதற்கிடையே, நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், தோஹாவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் இடம். நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் எறிந்து தோஹா டயமண்ட் லீக்கில் ஜொலித்தார். அவருக்கு வாழ்த்துகள்! அவரின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்

    • நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    • 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.

    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    • பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
    • இந்திய அணியினருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 68 ரன்னில் சுருண்டது.

    அடுத்து சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இந்தியாவின் திதாஸ் சாது ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலகக் கோப்பைபையும் இந்தியா வென்றதில்லை. இந்திய சீனியர் அணி 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் இந்திய இளம் படை, அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த போட்டியை இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா நேரில் சென்று கண்டு களித்தார்.

    இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்த ஜூனியர் மகளிர் அணிக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தலை வணங்கி வாழ்த்தை தெரிவித்தார். பின்னர் அனைத்து வீராங்கனைகளுக்கு கைகுழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு பிசிசிஐ செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர்.
    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

    தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் பிடித்து அசத்தினார். 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். அதன்பின் தடகளத்தில் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ராதான்.

    உலகளாவிய தடகள வீரர்கள் வீராங்கனைகள் குறித்த கட்டுரைகள் எழுதப்படுவது குறித்து நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியதால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022-ல் அதிக கட்டுரைகள் எழுதப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் உசைன் போல்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்துள்ளார். தற்போது நீர்ஜ் சோப்ரா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    2017-ல் ஓய்வு பெற்ற உசைன் போல்ட் குறித்து 574 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    ஜமைக்கானவின் தடகள வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா குறித்து 751 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    • நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை.
    • சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடர் பைனல் போட்டி நடந்தது.

    சூரிச்:

    சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    • காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.
    • சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

    லாசேன்:

    சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    அவர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், செப்டம்பர் 7ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

    • காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.
    • நீரஜ் சோப்ரா கடந்த 24-ந் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா கடந்த 24-ந் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது காயம் அடைந்ததால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவில்லை என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்திருந்தார்.
    • இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம் என மோடி பாராட்டு

    சென்னை:

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்து இருந்தார்.

    உலக தடகள சாம்பியன் ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-

    காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையிலும் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி கடுமையாக இருந்தபோதும் நாட்டுக்காக பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக கடுமையாக உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணமாகும். வருங்காலங்களில் நீரஜ் சோப்ரா இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

    நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் 2-ம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுக்கள்.

    உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    நீரஜ் சோப்ராவின் சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு இப்போட்களில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.

    நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும், விருதுகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    • உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
    • பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    சென்னை:

    அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். அவரது வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர்.

    சர்வதேச போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா! உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் இரண்டாம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமையடைகிறது' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
    • கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார்.

    அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.


    நீரஜ் சோப்ரா

    நீரஜ் சோப்ரா

    கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இறுதிச்சுற்றில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 10வது இடத்தை (78.72 மீ) பிடித்தார்.

    ஆண்டர்சன் பீட்டர்ஸ்

    ஆண்டர்சன் பீட்டர்ஸ்


     தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
    • இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    யூஜின்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது.

    இதில் இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்சில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா 'ஏ' பிரிவில் இடம் பெற்று இருந்தார். 'பி' பிரிவில் மற்றொரு அந்நிய வீரர் ரோகித் யாதவ் இடம் பெற்று இருந்தார்.

    இதில் 83.50 மீட்டர் இலக்கை எட்டுபவர்கள் அல்லது அதற்கு குறைவாக சிறந்த திறனை வெளிப் படுத்தும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

    நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். 2019-ம் ஆண்டு 2-வது சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்க வில்லை.

    'பி' பிரிவில் இடம்பெற்று இருந்த ரோகித் யாதவ் 80.42 மீட்டர் எறிந்தார். அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ரோகித் யாதவ் 11-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கிரெணடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ( பி பிரிவு) 89.91 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பெற்றார்.

    12 பேர் பங்கேற்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    டிரிபிள் ஜம்ப்பில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் எல்டோஸ் பால் முன்னேறினார். அவர் தகுதி சுற்றில் 16.68 மீட்டர் தாண்டினார். 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த அவர் 6-வது இடத்தை பிடித்தார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ஒருவராக அவர் வந்துஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற இந்தியர்களான பிரவீன் சித்தரவேல் (16.49 மீட்டர்) அப்துல்லா அபுபக்கர் (16.45 மீட்டர்) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    ×