search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்
    X

    காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்

    • காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.
    • நீரஜ் சோப்ரா கடந்த 24-ந் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா கடந்த 24-ந் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது காயம் அடைந்ததால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவில்லை என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×