என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நிரவ் ஷா
நீங்கள் தேடியது "நிரவ் ஷா"
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் பிங்க் ரீமேக்கை அஜித்துக்கு தேர்வு செய்தது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் போனிகபூர் கலந்து கொண்டு பேசும்போது, அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
“இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.
தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். ‘பிங்க்’ படத்தை தமிழில் எடுப்பதிலும், அஜித்துடன் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். மே மாதம் 1-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு போனி கபூர் கூறினார். #Thala59 #AjithKumar #ThalaAjith #BoneyKapoor #PinkRemake
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.14 படக்குழுவில் `சர்கார்' கூட்டணி இணைந்திருக்கிறது. #SK14 #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் `சீமராஜா' படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் மூன்று பாடல்களை எழுதுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது,
Once again wit d legend @arrahman Sir for #SK14
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 26, 2018
Happiness is meeting him often let alone writing 3 back to back albums for d Magician@Siva_Kartikeyan bro is a ray of hope 4 youngsters who dream of achieving big in life
Happy2 work wit d special @Ravikumar_Dir n @RDRajaofficialpic.twitter.com/iaCcYNGMaP
`எஸ்.கே.14 படத்தின் மூலம் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைகிறேன். அவரது மயக்கும் இசைக்கு அடுத்தடுத்து மூன்று பாடல்களை எழுதுகிறேன். வாழ்க்கையில் பெரிய இடத்தை பிடிக்க இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK14 #Sivakarthikeyan
Yogi Babu Karunakaran Rakul PreetSingh SK14 Sivakarthikeyan Ravikumar AR Rahman 24 AM Studious Scientists Nirav Shah Muthuraj Lyricist Vivek கருணாகரன் சிவகார்த்திகேயன் ரகுல் பிரீத்திசிங் ரவிக்குமார் ஏ.ஆர்.ரஹ்மான் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் விஞ்ஞானி நிரவ் ஷா முத்துராஜ் எஸ்.கே.14 யோகி பாபு பாடலாசிரியர் விவேக்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே.14 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SK14 #Sivakarthikeyan
பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த படத்திற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, அலெக்சா.எல்.எஃப் என்ற கேமராவை பயன்படுத்தி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK14 #Sivakarthikeyan
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #SK13 #Sivakarthikeyan
பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியருக்கிறது. `இன்று நேற்று நாளை' படம் ரிலீசாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவாகியிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் ரவிக்குமார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
with all ur blessings&support we have started our dream bilingual Project @siva_kartikeyan in @Ravikumar_Dir directorial & Our Proud Academy Award winning @arrahman musical Shoot Starts Today along with Pooja🌸🌸 Bless & Support us😊👍@Rakulpreet#ishagopikar#Banupriya#yogibabupic.twitter.com/FE5SIZuCAJ
— 24AM STUDIOS® (@24AMSTUDIOS) June 27, 2018
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK13 #Sivakarthikeyan
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #SK13 #Sivakarthikeyan
ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. காலத்தை கடந்து செல்வதை மையப்படுத்தி அறிவியல் படமாக உருவான இந்த படம் ரிலீசாகி இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு தனது அடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“இன்று நேற்று நாளை” வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவுற்றது! கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!
என்று தெரிவித்துள்ளார்.
ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். #SK13 #Sivakarthikeyan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X