search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்க விழா"

    • இலவச ஜூட் பேக், லேப்டாப், பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.

    மதுரை

    இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான அசஞ்ஜர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழிற்பயிற்சி பள்ளி இணைந்து மதுரை அவனி யாபுரத்தில் இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்பு ராமன் தலைமையில் நடை பெற்றது.

    கே.வி.ஐ.சி மண்டல இயக்குனர் அசோகன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், சுய தொழில் தொடங்குபவர்கள் மத்திய அரசின் 35 சதவீதம் மானிய தொகையை கடனாக பெறலாம் என்றார். இதில் பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகை யில், தமிழக அரசு மானி யத்துடன் புதிதாக தொழில் தொடங்கு பவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சிக்கு பின் தொழில் முனைவோராக மாறுவதற்கு எல்லா உதவிகளையும் வழி முறைகளும் செய்து தரப் படும் என கூறினார். சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி வங்கி வழிமுறைகள், கடன் பெற்று முன்னேறும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பெட் கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.

    • மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.
    • முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மற்றும் முகசீர மைப்பு மருத்துவமனையில் 16-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் கற்கோவில் ஆலய போதகர்கள் விக்டர் ஞானராஜ், ராஜ ஜெய்சிங், ஜெரோம் ஆகியோர் ஜெபம் செய்தனர். மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.

    குழந்தைகள் நல டாக்டர் மனேஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் ஸ்டெலின் தினக்ஸ் நன்றி கூறினார்.

    • த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் த.மு.மு.க.வின் 29-வது ஆண்டை முன்னிட்டு மாநில துணை பொது செயலாளர் சலி முல்லாஹ்கான் தலைமை யில் குமரய்யா கோவில் அருகில் த.மு.மு.க. கொடி யை ஏற்றி வைத்து தொண் டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங் கினர். அப்போது சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    தொடர்ந்து வாலாந்தர வையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றிய 120 மாண வர்கள், முதியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பிரி மியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் சபிக் ரஹ்மான், ம.ம.க. மாவட்டச் செயலாளர் ஆஷிக்சுல்தான், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பி னர் காதர் பிச்சை, மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா்.
    • ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது

    உடுமலை,ஆக.27-

    உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா். இதில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி விரிவுரையாளா் சேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும், எளிமையாக ஆங்கிலம் கற்பது எப்படி என்பது பற்றியும் சிறப்புரை ஆற்றினாா்.

    சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், தூய்மை பாரதம் பற்றியும் மாணவா்கள் பேசினா். தொடா்ந்து ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. மேலும் ஆங்கிலம் தொடா்பான வினாக்கள் கேட்கப்பட்டு சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்.

    • 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார்.
    • சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் பொறியியல் துறையின் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அருள் லின்ஸ்லி கலந்துகொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரை வழங்கினார். சங்கத்தின் மாணவ பொதுச்செயலாளர் கபிலேஷ் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    சங்கத்தின் மாணவ துணை தலைவர் ராஜசுனில் சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதேவி, சங்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். துறைத்தலைவர் டாக்டர் மோகன லட்சுமி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முடிவில் மாணவ இணை செயலாளர் விஷ்ணு காந்த் நன்றி கூறினார்.

    • இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • விழாவின் நிறைவாக தமிழாசிரியை சத்யா நன்றி கூறினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளி யின் தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். உதவி தலைமை யாசிரியர் சின்னதுரை முன்னிலை வகித்து பஞ்ச பூதங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தையும், சைவ சமய குறவர்கள் பற்றியும், சைவ சித்தாந்தத்தை பற்றி யும் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் அறிவியல் துறை மற்றும் ஆங்கில துறை சார்பாக ஆசிரியர்கள் சின்னராஜ், ரவி ஆகியோர் கலந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் கல்தோன்றி மண் தோன்றா காலத்தை வாலோடு தோன்றிய முன் தோன்றி மூத்த குடி என தமிழ் மன்ற சிறப்புரையாற்றினார்கள்.

    இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை தமிழாசிரியர்கள் சகாதேவன், சத்யா, செல்வி ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக தமிழாசிரியை சத்யா நன்றி கூறினார். 

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு இயற்கை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வன சரக அதிகாரி சுபாஷ் கலந்துகொண்டு இயற்கை வனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இறுதியாக இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

    • ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலா ளர் பாலாகுமார் முன்னிலை யில் கொண்டாடப்பட்டது.

    ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடிக்கம்பங்களில் புதிய கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கவுன்சிலர் மருது பாண்டியனை சந்தித்து இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பனைக்குளம் நூருல் அமீன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரிப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் கனகு மற்றும் பலர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.

    • சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா நடந்தது.
    • தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்க தொடக்க விழா தாளையடி கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நயினார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் சாரண சாரணிய இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சாரண இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆளுமைத் திறன், தலைமைப் பண்புகள் போன்ற திறன் வளரும் என்றார்.

    மதுரை மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ராஜசே கர், ராமநாதபுரம் மாவட்ட சாரண இயக்க ஒருகிணைப் பாளர் செல்வராஜ் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டு சாரண இயக்கத்தின் நோக் கம், குறிக்கோள், வரலாறு, அதன் செயல்பாடுகள், சாதனைகள் பற்றிக் கூறி னர்.

    உதயகுடி பள்ளி பட்ட தாரி ஆசிரியர் மரிய சவுரி ஜான்சிராணி நன்றி கூறி னார். இதில் பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி சாரண கேப்டன் மகாராணி, நயினார்கோவில் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் சாரணர் இயக்க ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூர் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை பேரவை தொடக்க விழா நடைபெற்றது
    • விழாவில் தமிழ் மன்றத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன், கல்லூரியின் துணை முதல்வர் ரதி தேவி, கல்லூரி உள்தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன வடிவு ஆகியோர்கள் பங்கேற்று பேசினர்.

    ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள நவரசம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழை நேசித்து படியுங்கள், சுவாசித்து படியுங்கள், தமிழால் உயருங்கள், தமிழால் வளருங்கள், தமிழை உயர்த்தி வாழ்வின் ஆதாரம் தமிழென்று பெருமையாக சொல்லுங்கள் என்று சிறப்புரை ஆற்றி அறம் தமிழ் மன்றத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் யோகப்பிரியா, சரண்யா, சங்கீதா, சண்முகபிரியா, நித்யா, கல்பனா, பூமதி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்வில் பிற துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது
    • ஆடி மாத சிறப்பு விற்பனைக்காக அதிகமான அளவில் புதுவகை காலணிகள் வந்துள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் நியூ ஜனதா புட்வேர் 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது தற்போது புதுப்பொலிவுடன் புது நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நியூ ஜனதா உரிமையாளர் கமல் நாசர் கூறியதாவது:-

    நியூ ஜனதா புட்வேரில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆடி மாத சிறப்பு விற்பனைக்காக அதிகமான அளவில் புதுவகை காலணிகள் வந்துள்ளது.

    எங்களிடம் முன்னணி நிறுவனங்களின் காலணிகள் வுட்லேண்ட், பக்காரு, அடிடாஸ், பூமா, லீகூப்பர் மற்றும் விகேசி, வாக்கரூ, பாராகான் உள்ளிட்ட ஏராளமான காலணிகள் அத்துடன் பள்ளி ஷுஸ், சாக்ஸ், முன்னணி நிறுவனங்களின் பள்ளி மற்றும் கல்லூரி பேக், டிராலிகள், பெல்ட், கேப், ரெயின்கோட், சன்கிளாஸ், மூட்டு வலி, கால் வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் காலணிகளும், மணப்பெண் களுக்கு தேவையான பேன்சி வகை காலணிகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும்.

    அனுபவம் வாய்ந்த விற்பனையாளர்கள் கொண்டு எங்கள் புட்வேர் இயங்கி வருகிறது. எங்களின் வாடிக்கையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கிளைகளானது குழித்துறை மற்றும் குளச்சலில் இயங்கி வரு கிறது. நாங்கள் மேலும் வளர உங்களது வருகையை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயன்ற உதவிகளை செய்கின்ற மனநிலையை இந்த மாணவர் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும்
    • மாணவர்கள் தத்தமது இயக்கத்தின் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாரணர்-சாரணியர் இயக்கம், சாரணர்-சாரணியர் மழலையர் இயக்கம், தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன.

    இந்த அமைப்புகளின் இந்த கல்வியாண்டுக்கான தொடக்க விழா தாளாளர் சனில் ஜான் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி பேராசிரியர் ஜெனி சந்தர் பதுவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சமூகத்தில் உதவி தேவைப்படுபவர்களின் வலிகளை உணர்ந்து அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்கின்ற மனநிலையை இந்த மாணவர் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    பள்ளி முதல்வர் லிசபெத், பள்ளியின் உயர்நிலைப்பிரிவுகளின் துணை முதல்வர் பிரேம்க லா, தலைமையாசிரியர் மோனிக்கா ஸ்பினோலா உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

    விழாவின்போது இயக்கங்களில் செயல்பட இருக்கும் இயக்க மாணவ தலைவர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். மேலும் மாணவர்கள் தத்தமது இயக்கத்தின் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

    முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ×