search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா
    X

     இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டியில் பேசிய காட்சி.

    மத்தூர் அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா

    • இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • விழாவின் நிறைவாக தமிழாசிரியை சத்யா நன்றி கூறினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளி யின் தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். உதவி தலைமை யாசிரியர் சின்னதுரை முன்னிலை வகித்து பஞ்ச பூதங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தையும், சைவ சமய குறவர்கள் பற்றியும், சைவ சித்தாந்தத்தை பற்றி யும் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் அறிவியல் துறை மற்றும் ஆங்கில துறை சார்பாக ஆசிரியர்கள் சின்னராஜ், ரவி ஆகியோர் கலந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் கல்தோன்றி மண் தோன்றா காலத்தை வாலோடு தோன்றிய முன் தோன்றி மூத்த குடி என தமிழ் மன்ற சிறப்புரையாற்றினார்கள்.

    இலக்கிய மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை தமிழாசிரியர்கள் சகாதேவன், சத்யா, செல்வி ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக தமிழாசிரியை சத்யா நன்றி கூறினார்.

    Next Story
    ×