பூலாங்கிணறு அரசு பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா

தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா்.ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உடுமலை,ஆக.27-

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா். இதில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி விரிவுரையாளா் சேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும், எளிமையாக ஆங்கிலம் கற்பது எப்படி என்பது பற்றியும் சிறப்புரை ஆற்றினாா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், தூய்மை பாரதம் பற்றியும் மாணவா்கள் பேசினா். தொடா்ந்து ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. மேலும் ஆங்கிலம் தொடா்பான வினாக்கள் கேட்கப்பட்டு சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com