search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா
    X

    சாரண- சாரணியர் இயக்கத்தை பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா

    • சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா நடந்தது.
    • தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்க தொடக்க விழா தாளையடி கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நயினார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் சாரண சாரணிய இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சாரண இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆளுமைத் திறன், தலைமைப் பண்புகள் போன்ற திறன் வளரும் என்றார்.

    மதுரை மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ராஜசே கர், ராமநாதபுரம் மாவட்ட சாரண இயக்க ஒருகிணைப் பாளர் செல்வராஜ் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டு சாரண இயக்கத்தின் நோக் கம், குறிக்கோள், வரலாறு, அதன் செயல்பாடுகள், சாதனைகள் பற்றிக் கூறி னர்.

    உதயகுடி பள்ளி பட்ட தாரி ஆசிரியர் மரிய சவுரி ஜான்சிராணி நன்றி கூறி னார். இதில் பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி சாரண கேப்டன் மகாராணி, நயினார்கோவில் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் சாரணர் இயக்க ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×