search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் பொறியியல் துறையின் சங்க தொடக்க விழா
    X

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் பொறியியல் துறையின் சங்க தொடக்க விழா

    • 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார்.
    • சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் பொறியியல் துறையின் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். 4-ம் ஆண்டு மாணவி நிகிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அருள் லின்ஸ்லி கலந்துகொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரை வழங்கினார். சங்கத்தின் மாணவ பொதுச்செயலாளர் கபிலேஷ் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    சங்கத்தின் மாணவ துணை தலைவர் ராஜசுனில் சங்கத்தில் வரவிருக்கும் திட்டங்களை பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதேவி, சங்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். துறைத்தலைவர் டாக்டர் மோகன லட்சுமி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முடிவில் மாணவ இணை செயலாளர் விஷ்ணு காந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×