search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inaugural"

    • தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா்.
    • ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது

    உடுமலை,ஆக.27-

    உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா். இதில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி விரிவுரையாளா் சேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும், எளிமையாக ஆங்கிலம் கற்பது எப்படி என்பது பற்றியும் சிறப்புரை ஆற்றினாா்.

    சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், தூய்மை பாரதம் பற்றியும் மாணவா்கள் பேசினா். தொடா்ந்து ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. மேலும் ஆங்கிலம் தொடா்பான வினாக்கள் கேட்கப்பட்டு சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று “முக்கிய கணிதத் திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில் "காளீஸ் கணித மன்றத்தின்" தொடக்க விழா நடந்தது. துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று "முக்கிய கணிதத் திறன்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கணிதத்தின் முக்கியத்துவம் மற்றும் நிஜ வாழ்க்கை பிரச்சினைகளின் தீர்வு காண்பதில் கணிதத்தின் முக்கியத்துவம், பங்கு பற்றி விளக்கினார். கணிதத் திறன்களான பகுப்பாய்வு சிந்தனை, விமர்சன சிந்தனை, தருக்க சிந்தனை, நேர மேலாண்மை திறன் பற்றி எடுத்துக்கூறி, அந்தத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் முறைகளை பகிர்ந்து கொண்டார். கணிதவியல் துறைத்தலைவி லலிதாம்பிகை வரவேற்றார்.

    துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார். இதில் 111 கணிதவியல் துறை மாணவர்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் ஆராய்ச்சி மன்றம் (மினர்வா) சார்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கும் நிகழச்சி நடந்தது. ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை பரிதாபேகம், கவிஞர் டோரு தத்தின் கவிதையான "தி லோட்டஸ்"-ன் "மோதல் மேலாண்மை கோட்பாட்டின் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வழங்கினார்.

    இந்த கட்டுரையில் சச்சரவு மேலாண்மை பற்றியும், அதை கவிஞர் டோருதத் தன் கவிதையில் எவ்வாறு கையாண்டுள்ளார்? என்பதையும் விளக்கினார். இதைத்தொடர்ந்து கேள்வி, பதில் நிகழ்வு நடந்தது.

    முன்னதாக ஆங்கிலத்துறை தலைவி பெமினா வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார்.

    • நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். குமுதா பள்ளியின் செயலாளர் டாக்டர். அரவிந்தன், துணை செயலாளர் டாக்டர்.மாலினி, இணை தாளாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் 4 மண்டல ங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 8 மாவட்ட அணிகள் பங்குகொண்டு லீக் மற்றும் நாக்அவுட் முறையில் விளையாடினர். கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இப்போட்டிக்காக அரியலூர், நாகர்கோயில், வேலூர், ஈரோடு மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தருமபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமுதா பள்ளியில் முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் தமிழ்நாடு கைப்பந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×