search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியவாத காங்கிரஸ்"

    • முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது.
    • கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது

    திருவனந்தபுரம்:

    கேரளாவையொட்டியுள்ள லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முகமது பைசல். இவர் லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நடந்த மோதலில் இவர் முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். 

    • பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது.
    • பாராமதிக்கு நிர்மலா சீத்தாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    மும்பை :

    புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்த பகுதி தேசியவாத காங்கிரசின் கோட்டையாக உள்ளது. தற்போது பாராமதி எம்.பி.யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார்.

    இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாராமதியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது.

    எனவே பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாராமதிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்தநிலையில் நிர்மலா சீதாராமன் பாராமதியில் கவனம் செலுத்துவதைவிட்டு விட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடு கிராஸ்டோ கூறியதாவது:-

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராமதி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பொருளாதாரத்தை மறந்துவிட்டார். பாராமதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அவர் மீண்டும் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பாராமதியில் சுப்ரியா சுலேயை பா.ஜனதா தோற்கடிக்கும் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் அவர் மத்திய நிதி மந்திரி என்பதை மறந்துவிட்டார். எனவே அவர் பாராமதியைவிட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசை ஜனநாயக ரீதியாக எதிர் கொள்வது சவாலான ஒன்றாகும்.
    • ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் உரையாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் போராட்டங்களைக் கையாள்வது மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவது குறித்து மோடி அரசாங்கத்தை சரத்பவார் கடுமையாக சாடினார்.

    அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் தற்போதைய மத்திய அரசை நாம் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும். நாம் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

    ஒரு மித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம் வகுக்க வேண்டும். சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கூட்டு போராட்டத் திட்டங்களை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறியுள்ளதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக சரத்பவார் போட்டியிட மாட்டார். பவார் ஒரு போதும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரவில்லை.

    மற்றவர்களுடன் ஒப்பிடும் போது எங்கள் கட்சி சிறியதாக இருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியின் தலைவர் நாடு முழுவதும் மதிக்கப்படுகிறார். காங்கிரசுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். இவ்வாறு படேல் குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற- சட்டமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து போட்டியிட போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். #NCP #SharadPawar
    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2004-ல் இருந்து 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் மராட்டியத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இனிவரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்.

    இது சம்பந்தமாக ராகுல்காந்தியும், நானும் 3 தடவை சந்தித்து பேசி இருக்கிறோம். கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாநில தலைவர்களுக்கு நாங்கள் தகவல் சொல்லிவிட்டோம். தொகுதி பங்கீடு குறித்து மாநில தலைவர்கள் பேசுவார்கள்.

    தொகுதி பங்கீட்டை ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடியும். அதில், ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் நாங்கள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வருவோம்.

    பாரதிய ஜனதாவையும், சிவசேனாவையும் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கம். பாரதிய ஜனதாவையும், சிவசேனாவும் ஒரே அணியில் நின்று தேர்தலில் போட்டியிடுமா? அல்லது தனித்து நிற்குமா? என்று தெரியாது.

    ஆனாலும், இப்போதும் சிவசேனா ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் நாங்கள் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #ParliamentElection #NCP #SharadPawar #NationalistCongressParty
    ×