search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபுல் படேல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார்.
    • அஜித்பவார் தரப்பும் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தது

    மும்பை:

    எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார்.

    அஜித்பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடந்தது.

    இந்நிலையில், அஜித்பவார் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் பிரபுல் பட்டேல் பேசியதாவது:

    சிவசேனாவின் சித்தாந்தத்தை நாம் ஏற்கும்போது, பா.ஜ.க.வுடன் செல்வதில் என்ன ஆட்சேபணை?

    இந்தக் கூட்டணியில் நாங்கள் சுதந்திரமான அமைப்பாக இணைந்துள்ளோம்.

    மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வுடன் சென்று இப்போது எதிர்க்கட்சியினருடன் அங்கம் வகிக்கின்றனர்.

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சரத் பவாருடன் சென்றிருந்தேன் நான். அங்கிருந்த காட்சியைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது.

    அங்கு 17 எதிர்க்கட்சிகள் இருந்தன. அவற்றில் 7 கட்சிகளுக்கு 1 மக்களவை எம்.பி. மட்டுமே உள்ளனர். ஒரு கட்சிக்கு ஒரு எம்பியும் இல்லை. அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறுகிறார்கள்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தேசத்துக்காகவும், எங்கள் கட்சிக்காகவும் தான். தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல என தெரிவித்தார்.

    • மத்திய அரசை ஜனநாயக ரீதியாக எதிர் கொள்வது சவாலான ஒன்றாகும்.
    • ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் உரையாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் போராட்டங்களைக் கையாள்வது மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவது குறித்து மோடி அரசாங்கத்தை சரத்பவார் கடுமையாக சாடினார்.

    அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் தற்போதைய மத்திய அரசை நாம் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும். நாம் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

    ஒரு மித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம் வகுக்க வேண்டும். சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கூட்டு போராட்டத் திட்டங்களை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறியுள்ளதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக சரத்பவார் போட்டியிட மாட்டார். பவார் ஒரு போதும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரவில்லை.

    மற்றவர்களுடன் ஒப்பிடும் போது எங்கள் கட்சி சிறியதாக இருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியின் தலைவர் நாடு முழுவதும் மதிக்கப்படுகிறார். காங்கிரசுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். இவ்வாறு படேல் குறிப்பிட்டார்.

    ×