என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீவிர சிகிச்சை"
- வழிப்பறி திருட்டு வழக்கில் கைதானவர்
- சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார்
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தேவா (வயது 24).
இவர் வழிப்பறி திருட்டு வழக்கில் ஆத்தூர் போலீ–சாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் தேவா நேற்று இரவு 11 மணி அளவில் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார். இதையடுத்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.உடனே சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று ேதவாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொன்னைப் பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகள் பானுமதி (வயது 30) இவருக்கும், கண்டிக்க பட்டியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
துபாயில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். அவர் நண்பர்களுடன் மது குடிக்க பழகினார். போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் வேதனை அடைந்த பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவர் தனது 2 மகன்களையும் அழைத்து சென்றதால் செல்வம் ஆத்திரம் அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார்.இதனை கண்ட மாமியார் செல்வமணி அவரை தடுக்க முயன்றார்.
அப்போது செல்வம் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் செல்வமணி பரிதாபமாக இறந்தார். மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.
- விஷம் குடித்து பஞ்சாயத்து துணை தலைவர் தற்கொலைக்கு முயன்றார்.
- சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேகாக்கொல்லை ஊராட்சி வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (வயது 31). முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர்.இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கி வருகிறார். கடன் கொடுத்த நபர் நிலத்துக்கான பத்திரத்தை வேறு ஒருவருக்கு வழங்கி உள்ளார்.
அந்த நபர் சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய்காந்தி வீட்டில் இருந்த போது திடீர் என விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனே சஞ்சய்காந்தி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.
மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் திடீர் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் தாயமங்கலம் ஷண்மிகா (வயது 3) பாகனேரியை சேர்ந்த கவின்(10) இடையமேலூரை சோந்த ஆறுமுகம் ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குணா (வயது22), பொன்னிறை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (24), குடவாசலை சேர்ந்த அரவிந்த்சாமி (28) ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது நேற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து 3 பேருக்கும் தனியாக இடம் வசதி ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து படுக்கைகளுக்கும் கொசு வலை போடப்பட்டுள்ளது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. #DengueFever
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்