search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலைக்கு முயன்ற கைதி
    X

    தற்கொலைக்கு முயன்ற கைதி

    • வழிப்பறி திருட்டு வழக்கில் கைதானவர்
    • சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தேவா (வயது 24).

    இவர் வழிப்பறி திருட்டு வழக்கில் ஆத்தூர் போலீ–சாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் தேவா நேற்று இரவு 11 மணி அளவில் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார். இதையடுத்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.உடனே சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று ேதவாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×