search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured wife"

    • கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொன்னைப் பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகள் பானுமதி (வயது 30) இவருக்கும், கண்டிக்க பட்டியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    துபாயில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். அவர் நண்பர்களுடன் மது குடிக்க பழகினார். போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் வேதனை அடைந்த பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அவர் தனது 2 மகன்களையும் அழைத்து சென்றதால் செல்வம் ஆத்திரம் அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார்.இதனை கண்ட மாமியார் செல்வமணி அவரை தடுக்க முயன்றார்.

    அப்போது செல்வம் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் செல்வமணி பரிதாபமாக இறந்தார். மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

    ×