search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Critical Care"

    • நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.
    • பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.அதே பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய விளை நிலம் உள்ளது.இந்த நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.அப்போது அருகில் இருந்த முல்லைத் தோட்டத்தில் இருந்து கூட்டமாக பறந்து வந்த விஷ வண்டுகள்அ ங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி தாக்கியது.

    இதில் சுப்பிரமணி (வயது 49),பரமசிவம் (வயது 28) ஜெயக்கொடி, சிவா,பூங்கொடி ஆகிய 5 பேர்படுகாயம் அடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த பரமசிவம் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
    • பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் அசலன்(55) கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த புளியம் மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறினார். அப்போது மரக்கிளை மீது நின்று கொண்டிருந்த அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்- இன்ஸ்ெபக்டர்லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர்.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×