என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பஞ்சாயத்து துணை தலைவர்
- விஷம் குடித்து பஞ்சாயத்து துணை தலைவர் தற்கொலைக்கு முயன்றார்.
- சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேகாக்கொல்லை ஊராட்சி வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (வயது 31). முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர்.இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கி வருகிறார். கடன் கொடுத்த நபர் நிலத்துக்கான பத்திரத்தை வேறு ஒருவருக்கு வழங்கி உள்ளார்.
அந்த நபர் சஞ்சய் காந்தியிடம் ரூ. 2 லட்சம் பணத்துக்கு ரூ. 15 லட்சம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய்காந்தி வீட்டில் இருந்த போது திடீர் என விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனே சஞ்சய்காந்தி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்