search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் காயம்
    X

    விபத்தில் காயமடைந்த சேகர், ஜெயக்குமார்.

    மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் காயம்

    எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×