search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் தியாகராஜர் கோவில்"

    • அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.
    • அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் தனி சந்நிதியில் உள்ளது.

    அனுமனுக்கு புதுவால் கொடுத்த தியாகேசர்

    அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.

    பல தலங்களை தரிசித்து திருவாரூரை அடைந்த ஆஞ்சநேயன் திருவாரூர் பராபரனை வழிபட்டான்.

    லிங்கப் பிரதிட்டை செய்து பூஜித்தான்.

    அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ளது.

    ஈசன் திருவருளால் மீண்டும் பழையபடி அழகிய வால் பெற்ற ஆஞ்சநேயன் நோய் தீர்த்த வைத்திய லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தான்.

    • ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.
    • இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-ராமர் வழிபட்ட தலம்

    பிள்ளைப்பேறு இல்லாத தசரதன் பல தலங்களையும் தரிசித்து வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.

    ஆவூர்ப் பசுபதீஸ்வரம் முதலிய தலங்களை வழிபட்ட பின்னர் திருவாரூரை அடைந்தான்.

    ஆரூர் நாயகனை வழிபட்ட பின் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.

    தந்தையாகவும் தாயாகவும் சேயாகவும் திகழும் தியாகராஜப் பெருமானின் திருவருளால் திருமாலை மகனாக அடையும்பேறு பெற்றான்.

    ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.

    தசரதன் மட்டுமன்று அவன் தந்தையான அஜன், தசரதன் மகன் ராமன், அவனுடைய புதல்வர்கள் லவன் குசன் எனத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ரகு வம்சத்தினர் திருவாரூர் பெருமானை பூஜித்து லிங்க பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் அடைந்துள்ளனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.

    • இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
    • இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-கோவில் அமைப்பு

    33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோவிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் அமைந்துள்ளன.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

    இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும்.

    அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்திருக்க வேண்டும்.

    சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.

    சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோவிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

    இக்கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளது.

    ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள் உள்ளன.

    இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது.

    இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.

    அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.

    இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

    இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர்.

    பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.

    தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம்.

    அறநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோவிலாகும்.

    • தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை.
    • பண் - பதினெண் வகைப்பண்

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்

    1. ஆடுதண்டு - மணித்தண்டு,

    2. கொடி - தியாகக்கொடி,

    3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,

    4. மாலை - செங்கழுநீர்மாலை,

    5. வாள் - வீரகண்டயம்,

    6. நடனம் - அஜபா நடனம்,

    7. யானை - ஐராவணம்,

    8. மலை - அரதன சிருங்கம்,

    9. முரசு - பஞ்சமுக வாத்தியம்,

    10. நாதஸ்வரம் - பாரி,

    11. மத்தளம் - சுத்தமத்தளம்,

    12. குதிரை - வேதம்,

    13. நாடு - சோழநாடு,

    14. ஊர் - திருவாரூர்,

    15. ஆறு - காவிரி,

    16. பண் - பதினெண் வகைப்பண்

    என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்க பொருள்களாகும்.

    தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை, அவருடன்

    1. அருளிப்பாடியார்,

    2. உரிமையில் தொழுவார்,

    3. உருத்திரப் பல்கணத்தார்,

    4. விரிசடை மாவிரதிகள்,

    5. அந்தணர்கள்,

    6. சைவர்கள்,

    7. பாசுபதர்கள்,

    8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்கள்.

    • உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
    • தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-சோமாஸ்கந்தர்

    உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.

    அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.

    அவரோடு இணைந்து காட்சி தரும் உமைக்கு கொண்டி எனப் பெயர்.

    தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
    • ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-தல வரலாறு

    திருவாரூர் தியாகராஜர் கோவில், மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோவில் ஆகும். இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

    இக்கோவில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.

    ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார்.

    திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார்.

    பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்;

    அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது.

    இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

    இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

    • பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாக உள்ளது.
    • உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் மூலவராக புற்றிடம் கொண்டார் அருள்பாலித்து வருகிறார். உற்சவராக தியாகராஜர் அருள்பாலித்து வருகிறார். கமலாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். அதேபோல கோவிலுக்கு அருகே உள்ள கமலாலய குளம் புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. கமலாலயக்குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது.

    தியாகராஜர் கோவிலில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடந்தது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    • மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
    • 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.

    ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு மூடுவது வழக்கம். இதனால் பிரம்மாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது.

    ஆழித்தேரை எல்லா நேரத்திலும் எல்லோரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடந்தது.

    இதனையடுத்து ஆடிப்பூர விழாவையொட்டி அம்பாள் தேரோட்டம் நடைபெறும். ஆழித்தேருக்கு பின்னால் நிறுத்தப்பட்டு உள்ள அம்பாள் தேர், ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும். இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூறாக இருக்கும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால் கூட ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு சேதமடைந்து விடும்.

    இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளை கொண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டமும் நடந்தது.

    இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு மீண்டும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

    இதில் மேற்பகுதி கூரை மட்டும் போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களிலும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது.

    திருவாரூரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆழித்தேருக்கு சரிவர கண்ணாடி கூண்டுகள் பொருத்தாததால் தேர் நனைந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    ஆழித்தேரை பாதுகாக்கும் நடவடிக்கையாக மந்த கதியில் நடைபெறும் கூண்டு அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விரைந்து பணிகளை முடித்து மழையில் தேர் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.
    • தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கோவில் என்ற பெருமை 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கே உரியது.

    ஒன்பது ராஜ கோபுரங்கள்,

    எண்பது விமானங்கள்,

    பன்னிரண்டு பெரிய மதில்கள்,

    பதிமூன்று மிகப்பெரிய மண்டபங்கள்,

    பதினைந்து தீர்த்தக்கிணறுகள்,

    மூன்று நந்தவனங்கள்,

    மூன்று பெரிய பிரகாரங்கள்,

    முன்னூற்று அறுபத்து ஐந்து லிங்கங்கள்

    நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள்,

    எண்பத்து ஆறு விநாயகர் சிலைகள்,

    இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது இந்த கோவில்... சோழர்கள் கட்டிய கோவில் இது. பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள் மராத்திய மன்னர்கள் என அனைவரும் தமது ஆட்சியில் இக்கோவிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

    திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.

    தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

    நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களும் அமைந்துள்ளது.

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கற்றூண்கள், திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக முன்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவில் ஐந்து வேலி,

    குளம் ஐந்து வேலி,

    செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி

    என்ற பழமொழி இந்த கோவிலின் சிறப்பை உணர்த்தும் (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).

    -பி.சுந்தர்

    ×