search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசனம்"

    • தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    • கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, நெடுஞ்சேரி கிராமத்தில் மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகாபூர்ணஹீதி யாத்ரா ஹோமம், சோமகும்பபூஜை உள்பட யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபா ராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து திவ்ய கடங்கள் புறப்பட்டு நடைபெற்றது.

    பின்னர் கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • விவசாயிகளின் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதியின் கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தம்பதியினர் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர்.

    அங்கு இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தது.

    தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் அனைவரும் கோவிலில் உள்ள பிற சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    ஆனாலும், காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். நானும் டெல்டாகாரன் தான் என கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை என்றார்.

    அப்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்தனர்.
    • செவ்வாய் பகவான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    சீர்காழி:

    ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலக்ஷி என்பவர் தலைமையில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரைன் நாடுகளைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவகிரக ஆலயங்களில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தனர்.

    பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்கள் விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள் மற்றும் செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    அப்போது அவர்கள் காயத்ரி மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை சப்தமாக சொல்லி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வெளிநாட்டு பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் விபூதி பிரசாதம் வழங்கியதுடன், தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது கொள்ளிடம் குழந்தைகள் நல மருத்துவர் முருகேசன், சீர்காழியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மார்கோனி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 108 சங்குகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருக்கு வளை தியாகராஜர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி மூலவர் பிரம்மபுரீ ஸ்வரருக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய சங்குகளால் அபிஷேகம் நடந்தது.

    முன்னதாக 108 சங்குகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து, சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபா ரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • கோவில்களில் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ கோவில்களிலும் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களையும் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரபோஸ் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ் மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.

    கரந்தை கண்ணன், மாநில இணை செயலாளர் மகேந்திரன், மாஸ்டர் சுரேஷ், மாநில துணை தலைவர் கோவி ந்தராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    முடிவில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மையக்குழு உறுப்பினர் கே.ஆர்.ஜி. ராஜா செய்திருந்தார்.

    இதில் முன்னாள் காவல் அதிகாரி வைத்தியநாதன், மகளிர் அணி கோமதி, அலமேலு, சண்முகம், சக்தி, மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பின் பஞ்ச ஆர்த்தி செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளின் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவின் 6ம் நாள் அன்று கந்தசஷ்டியை முன்னிட்டு, உற்சவர் சண்முகசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வும் தொடர்ந்து, கிழக்கு சன்னதியில் சூரபத்மினி வதம் செய்கின்ற சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    7-ம் நாள் அன்று தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும், அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னி யாகம் வளர்த்து மங்கள ஞான் பூட்ட உற்சவர் சண்முகசுவாமிக்கு தேவசேனாவுடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மேற்கு கோபுர வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமாரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

    சூரனை முருகப்பெ ருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சா ரியார்களால் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பொறு ப்பாளர் சரத்சந்திரன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால எழிலரசன்,பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அற ங்காவல ர்குழுத்தலைவர் சாமிநாதன்,நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் சம்பந்த விநாயகர், சிவசித்தி விநாயகர் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 17-ம் தேதி காலை கணபதி,நவகிரக,லட்சுமி ஹோமமும்,மாலை அங்குரார்பணம், கும்பாலங்காரம்,பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது. 18-ம் தேதி காலை யாகபூஜை, கன்னியா பூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. இன்று யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    இதில் வேளாக்குறிச்சி 18 - வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 கிலோ புதிய ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதுசமயம் ஐயப்பனுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் வீதியுலா மற்றும் படிபூஜை நடைப்பெற்றது.

    தொடர்ந்து ஐயப்பன் சாமிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், சாஸ்தாஹோமம் நடைப்பெற்றது.

    இதையடுத்து ஐயப்பன் சாமி அலங்காரத்துடன் செண்டை மேளம் முழக்கத்துடன் வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அங்கிருந்து புறப்பட்டு சீனிவாச பெருமாள் கோவில் 4 ராஜ வீதிகள் வழியாக பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவில் வந்தடைந்தது. இரவு சிறப்பு படி பூஜைகளும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் ஐயப்பன் யாத்திரை குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .

    • ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 14 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆனது.

    ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் வரையிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி மங்கையர்கரசி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.

    இதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

    அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×