search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளை பார்க்க முடியும்.
    • கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதித்தார்.

    பின்னர், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டுக்கு ஆதரவுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " டுவிட்டர் போன்ற ஒரு பணியைக் கொண்டிருக்கும் போது தளத்தை வலுப்படுத்த பெரிய நகர்வுகளை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையானது தரவு ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் "தீவிர நிலைகளை" ஊக்கப்படுத்துகிறது.

    எங்கள் பயனர் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, எங்கள் தளத்திலிருந்து ஸ்பேம் மற்றும் போட்களை அகற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    இருப்பினும், மஸ்க் அறிவித்த சில நாட்களில், டுவிட்டர் பயனர்கள் வரம்பை எட்டிய பிறகு, கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை என்பதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டனர். விளம்பரதாரர்களை ஈர்க்கும் யாக்கரினோவின் முயற்சிகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெரிஃபைடு பெற்றிருந்தால் மட்டுமே டுவீட்டெக்கை பயன்படுத்த முடியும்
    • ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என சில நாட்களுக்கு முன் அறிவிப்பு

    உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க் நடத்தி வரும் சமூக வலைதள நிறுவனம் டுவிட்டர் (Twitter). இதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். பயனர்களுக்கு ஒரு தங்குதடையற்ற சேவை வழங்கும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தை லாபகரமாக நடத்தவும் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இதில் ஒன்றாக டுவிட்டர் வலைதளத்தில் உள்ள டுவீட்டெக் (TweetDeck) வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், இனி பயனர்கள் வெரிஃபைடு (Verified) அதாவது சரிபார்க்கப்பட்டவர்கள்- எனும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறை இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டுவீட்டெக் பழைய பதிவுகளை எளிதாக பார்ப்பது உட்பட பலவிதமான எளிதான படிக்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தற்போது புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டுவீட்டெக்கை பயன்படுத்தி வெரிஃபைடு அவசியம் என்ற நிலையில், பயனர்களிடம் கட்டணம் வசூலிக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், டுவிட்டரின் உள்ளடக்கத்தை எளிதாக கண்காணிக்க டுவீட்டெக் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், இது டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து விளம்பர வருவாய்க்கு மிகவும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    டுவிட்டரை வாங்கியதும் வெரிஃபைடு பெறுவதற்கு கட்டணம் வசூலித்தது. சரிபார்க்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என்று சில நாட்களுக்கு முன்புதான் டுவிட்டர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் டுவீட்டெக்கில் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    • புதிய சேவை திரெட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.

    மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த சேவை பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள சேவை ஜூலை 6-ம் தேதி அறிமுகமாவதாக கூறப்படுகிறது. புதிய சேவை திரெட்ஸ் (threads) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    முன்னதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றே இருக்கும் என்றும், பயன்பாடுகள் டுவிட்டர் போன்றே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை மற்றும் மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான தளமாக இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய சேவை பற்றிய தகவல், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கிறது. "திரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலி," என்றும், இது ஜூலை 6-ம் தேதி முதல் டவுன்லோடு செய்ய கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது.

    • நான்கு நாடுகளில் செய்து கொடுத்த பணிகளுக்கான தொகையினை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு.
    • வழக்கு செலவுகள், வட்டி ஆகியவற்றோடு இழப்பீட்டுத் தொகையை கோர இருப்பதாக ஃபெசிலிடேட் கூறியிருக்கிறது.

    ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை நிறுவனமான ஃபெசிலிடேட் கார்ப் நிறுவனம், டுவிட்டருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வழக்கு மனுவில், டுவிட்டர் நிறுவனம் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரசீது தொகையை செலுத்த தவறியதால், ஒப்பந்தத்தை மீறியதாகவும், செலுத்த வேண்டிய சுமார் ரூ.5.5 கோடியை ($665,000) மொத்தமாக செலுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

    உலகின் பிரபல கோடீஸ்வரர்களில் முதன்மையானவரான, எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக தளத்தை சுமார் ரூ. 3 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியதிலிருந்து, அதற்கு எதிராக "பில்கள் மற்றும் வாடகையை செலுத்தவில்லை" என்று தொடரப்படும் வழக்குகளில், இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்தின் வழக்கும் ஒன்றாகும்.

    2022 முதல் 2023 ஆண்டு முற்பகுதி வரை, லண்டன் மற்றும் டப்ளினில் உள்ள டுவிட்டரின் அலுவலகங்களில், சென்சார்களை நிறுவி, சிங்கப்பூரில் அலுவலகப் பணிகள் முடித்து, சிட்னியில் உள்ள அலுவலகம் பணிபுரிதலுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொடுத்ததாகவும் ஃபெசிலிடேட் தெரிவித்துள்ளது.

    இந்த 3 பணிகளுக்காக டுவிட்டர் நிறுவனம் முறையே, சுமார் ரூ.2 கோடியே 10 லட்சம் ($257,000), சுமார் ரூ. 3 கோடி 31 லட்சம் ($404,000) மற்றும் சுமார் ரூ. 33 லட்சம் ($40,700) தர வேண்டும் என்று ஃபெசிலிடேட் தெரிவித்துள்ளது.

    இதற்கான வழக்கு விசாரணையின் போது நிர்ணயிக்கப்படும் தொகை, வழக்கு செலவுகள், வட்டி ஆகியவற்றோடு இழப்பீட்டுத் தொகையை கோர இருப்பதாக ஃபெசிலிடேட் கூறியிருக்கிறது.

    மே மாதம், ஒரு முன்னாள் மக்கள் தொடர்பு நிறுவனம், ட்விட்டர் தனது பில்களை செலுத்தவில்லை என்று நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான இன்னிஸ்ஃப்ரீ எம்&ஏ (Innisfree M&A) எனும் நிறுவனம் சுமார் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது.

    பிரிட்டன்ஸ் கிரவுன் எஸ்டேட் (Britain's Crown Estate) எனும் நிறுவனம் வாடகை பாக்கி நிலுவைக்காக டுவிட்டரின் மீது ஜனவரியில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    • டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும்.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

    அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும்.

     

    "தகவல் திருட்டு மற்றும் சிஸ்டம் தவறாக கையாளுவது உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் நோக்கில், நாங்கள் தற்காலிக கட்டுப்பாடுகள்- வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 6 ஆயிரம் பதிவுகள் / வெரிஃபைடு இல்லா பயனர்கள் தினமும் 600 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 300 அக்கவுன்ட்களையும் பார்க்க முடியும்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்து இருந்தார்.

    பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு பதிவில், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.

    இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது.
    • டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார்.

    இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது. இதனால் பயனர்கள் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர். இதுதொடர்பாக புகார்கள் டுவிட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

    இதையடுத்து இப்பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    அதன்படி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை படிக்க முடியும் என்றும் அறிவித்தார்.

    அதன் பின் இந்த உச்ச வரம்பை உயர்த்தினார். சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 1000 ஆகவும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 500 ஆகவும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.

    தேவையற்ற தகவல்களை அழிப்பதற்காக இந்த தற்காலிகமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்டுப்பாட்டால் டுவிட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

    • உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் முடங்கியது.
    • இதனால் டுவிட்டர்வாசிகள் டுவிட் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    நியூயார்க்:

    உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் டுவிட்டர். இந்த சமூக வலைதளத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.

    இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான பயனாளர்கள் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர்.

    இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். இவை டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், டுவிட்டர் டவுன் என்ற ஹாஷ் டேக் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

    • ‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
    • ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    பெங்களூரு :

    மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராகவும் போலி பதிவுகள், வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிடும் சமூக வலைத்தள கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சமூக வலைத்தளமான 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

    அந்த உத்தரவில், சமூக விரோத செயல்களில் தொடர்புடையதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு 2,851 கணக்குகளையும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதனை பின்பற்ற தவறினால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    எனினும், மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் 'டுவிட்டர்' நிறுவனம் இருந்து வந்தது. மேலும், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் 'டுவிட்டர்' நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது டுவிட்டர் நிறுவனம் சார்பில் வாதாடிய வக்கீல், 'சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவது அவரவர் விருப்பம். அதை தடுக்க நினைப்பது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் ஆகும். அதையும் மீறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வலைத்தள கணக்குகளை பதிவிடுபவர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதி, பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துகளை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் 'டுவிட்டர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசின் உத்தரவை கடைப்பிடிக்க தவறிய 'டுவிட்டர்' நிறுவனம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் 'டுவிட்டர்' நிறுவனத்தின் மனுவைவும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    • டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனும் புதிய செயலியை கொண்டுவர முயற்சி
    • சுவாரஸ்யமான உரையாடலில் மஸ்க் சண்டைக்கு இழுத்தார்

    மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் முகநூல் எனப்படும் பேஸ்புக் (Facebook) மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நுண்வலைப்பதிவு நிறுவனமான டுவிட்டர் (Twitter) ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர்களுக்கிடையே அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடைபெறுவதுண்டு.

    சமீபத்தில் டுவிட்டருக்கு போட்டியாக முகநூல் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சி "பி92 (P92)" என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    இம்முயற்சியை மஸ்க் ரசிக்கவில்லை. முகநூல் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

    இதை உற்றுக் கவனித்து வந்த டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ''ஜூக்கர்பெர்க், ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர். சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்" எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை எச்சரித்தார்.

    இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்ட எலான் மஸ்க் ''நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா?'' என மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.

    இதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், "இடத்தை தெரிவிக்கவும்" என எதிர்கோரிக்கை விடுத்திருக்கிறார்.

    இவர்கள் இருவருக்கிடையேயான இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகளின் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

    • எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது சிறந்தது
    • சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்படுவோம்

    இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசுக்கு எதிராகவும், விவசாய போராட்டத்தை ஆதரித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலடியும் கொடித்திருந்தார்.

    அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமெரிக்க பிரமுகர்களை சந்தித்தார். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அதில் ஒருவர்.

    தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மோடியை சந்தித்த பின், டுவிட்டரின் முன்னாள் சிஇஓ-வின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு எலான் மஸ்க் கூறியதாவது:-

    எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது நமக்கு சிறந்தது. அதைத்தாண்டி செய்வது இயலாத காரியம். சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு செல்ல சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

    மேலும், ''டெஸ்லா இந்தியா சந்தைக்கு வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ''அடுத்த ஆண்டு இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியாவில் டெஸ்லா விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சில விசயங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை''

    இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.

    • டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது.
    • புதிய செயலி குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தகவல்.

    டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், தனது நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். டுவிட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.

    'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று டுவிட்டர் பயனர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க்- 'இது வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார். அந்த வகையில் புதிய டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்..

     

    - மற்ற நிறுவனங்களை போன்றே டுவிட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த வீடியோ ஆப் டுவிட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.

    - புதிய திட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது. யூடியூப் ஷாட்ஸ், டிக்டாக் போன்ற சேவையை டுவிட்டர் நிறுவனமும் அறிமுகம் செய்யலாம்.

    - வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டர் நிறுவனம் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் பெரிஸ்கோப் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

    - வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை டுவிட்டர் வழங்கி வருகிறது.

    - புதிய செயலி டுவிட்டர் மட்டுமின்றி அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இது வருவாய் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

    • உலகின் நம்பர் ஒன் பணக்காரரான மஸ்க், டுவிட்டரை வாங்கும்போது விமர்சனம் எழுந்தது
    • நிர்வாகத்தில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டார்

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கி அதன் நிர்வாகத்தில் பல அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளம் இதற்கு முன்பு சிவில் சமூகத்தின் மீது ஒரு அரிக்கும் தன்மை உடைய தீங்கை விளைவிப்பதாக இருந்தது. அதனை தம்மால் மாற்றி, மனிதகுலத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தளமாக அதனை செயல்பட வைக்க முடியும் என தான் நம்பியதாக கூறினார்.

    கிட்டத்தட்ட 4000 பேர் குழுமியிருந்த விவா-டெக் கருத்தரங்கத்தில் பல விஷயங்கள் குறித்து பேசிய மஸ்க், மேலும் கூறியதாவது:-

    தொடர்ந்து டுவிட்டர் உபயோகப்படுத்தும் பயனாளிகள் அந்த தளம் பயன்படுத்தும்போது கிடைக்கும் அனுபவம் மேம்பட்டிருப்பதை உணர முடியும். இதுவரை இல்லாத அளவிற்கு டுவிட்டரின் பயன்பாடு மக்களை சென்றடைந்துள்ளது.

    மேலும், விளம்பரதாரர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோவின் திறமையின் மீது தமக்கு நம்பிக்கை உள்ளது. விலகிச் சென்ற விளம்பரதாரர்களில் பெரும்பாலானோர் பெருமளவில் திரும்ப வந்து விட்டார்கள். மேலும் சிலர் விரைவில் வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அது ஆபத்தாக மாறலாம். டிஜிட்டல் அதிநுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விளைவுகள் நேர்மறையானவைதான் என்றாலும் இதனால் மக்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும் பேராபத்தும் நிச்சயம் உள்ளது.

    தனது நியுராலிங்க் கார்பரேசன் இந்த வருடத்தில், முதல் மனித உள்வைப்பு செயல்முறையில் அந்நிறுவனம் ஈடுபடும். அதன் முன்னேற்றம் தாமதமாக இருந்தாலும் அதன் நோக்கம் மனித உடல் உறுப்புகளில் செயல்பாடு இழந்தவர்களுக்கு முழுவதுமாக அதனை மீட்பதுதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எலான் மஸ்கிடம் இருந்து முதல் பணக்காரரர் என்ற பெருமையை குறுகிய காலத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பெற்றிருந்தார். அவரை சந்தித்ததுடன் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் அவரிடமிருந்து மீண்டும் அந்த பட்டத்தை மீட்டெடுத்தார் மஸ்க் எனபது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தனது நாட்டில் எலான் மஸ்க் ஒரு தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்பதற்காக அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இப்பின்னணியில் இருவரும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×