search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் கைது"

    • பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்.
    • அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.

    விளாத்திகுளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (வயது48). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக நாகஜோதியின் கார் டிரைவரான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் அவரது சகோதரர் குழந்தைக்கனி, உறைகிணறு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர கணபதி 4 பேரை கைது செய்து குளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மைக்கேல்ராஜ் கூறியதாவது:-

    எனது பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன். ஆனால் என்னிடம் அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் நாகஜோதியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

    சம்பவத்தன்று காலை நாகஜோதிக்கு போன் செய்து விளாத்திகுளத்தில் எனக்கு ஒருவர் பணம் வரவேண்டியுள்ளது என்றும், என்னுடன் வந்தால் அதை வாங்கி உங்கள் கடனை கொடுத்துவிடுகிறேன் எனக்கூறி நாகஜோதியை அழைத்து வந்தேன். பின்னர் நாகஜோதியை விளாத்திகுளம் அழைத்து வந்தேன். சூரங்குடியில் எனது சகோதரர் குழந்தைக்கனி, உறவுக்காரர்காளான மிக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி சென்றேன்.

    சூரங்குடியில் இருந்து கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குமாரசக்கனபுரம் கிராமம் அருகில் காரில் வைத்தே கயிற்றைக்கொண்டு நாகஜோதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

    பின்னர் நாகஜோதியின் உடலை காரின் உள்பகுதியில் இருந்து தூக்கி டிக்கியில் வைத்து கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு உடலை கொண்டு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி காருடன் நாகஜோதியை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டியில் சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    இதில் லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போதை பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (29) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 29 மூட்டைகளில் 400 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். 

    • மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் கடற்கரையும் ஒன்றாகும். இங்குள்ள மணல் பரப்பை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சம்பவத்தன்று இந்த பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் இறங்கி உற்சாக குளியல் போட்டனர்.

    அப்போது மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளிடம் ரகளையிலும் ஈடுபட்டார்.

    இதுகுறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு சுற்றுலா பயணிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பதும், டிரைவரான இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேனில் சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது மகன் பாபு, அவரை அங்கிருந்து மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்தார். தனது தாய், அறையில் இருந்த மரக்கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக போலீசில் பாபு தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொன்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சுமித்ராவை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்களது வீட்டில் சுமித்ராவின் மகளுடன் முருகன்(42) என்பவர் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்த விவகாரம் தெரியவந்தது.

    திருவண்ணாமலையை சேர்ந்த அவருக்கு, வளைகுடா நாட்டில் டிரைவராக வேலை பார்த்த போது அங்கிருந்த இந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கேரளாவுக்கு திரும்பிவந்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு முருகன், இந்திராவின் குழந்தைகள், சகோதரர் பாபு மற்றும் தாய் சுமித்ரா ஆகியோருடன் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தி ருக்கிறார்.

    இதனால் அவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும், சுமித்ரா கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    இருந்தபோதிலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சுமித்ராவை கொன்றதை ஒப்புக்கொண்டார். மகள் இந்திராவுடன் லிவ்-இன் பார்ட்னராக முருகன் வாழ்வது சுமித்ராவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. இதனால் சுமித்ரா மற்றும் முருகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டபடி இருந்திருக்கிறது.

    இதனால் சுமித்ராவை கொல்ல முருகன் திட்டமிட்டார். சுமித்ராவின் மகன் பாபு இல்லாத நேரத்தில் அவரை கொல்ல முடிவு செய்திருக்கிறார். அதன்படி பாபு வெளியே சென்றிருந்த நேரத்தில், சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். பின்பு சுமித்ரா தவறி விழுந்து காயமடைந்தது போன்று செட்-அப் செய்துவிட்டு, சென்றிருக்கிறார்.

    சுமித்ராவின் சாவுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாதது போன்று வழக்கம்போல் நடமாடிய படி இருந்திருக்கிறார். ஆனால் போலீசார் நடத்திய துரித விசாரணை காரணமாக முருகன் சிக்கிக்கொண்டார். கைது செயயப்பட்ட முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    • போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
    • ரமேஷ் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சேர்ந்த 16 வயது இளம்பெண் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:- நான் எனது தாயுடன் திருப்பூரில் வசித்து வருகிறேன். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

    இந்தநிலையில் சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் (வயது 42) என்பவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வந்த ரமேஷ் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்தேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.

    இதையடுத்து போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்த போது இளம்பெண்ணின் தாயுடன் ரமேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதனால் ரமேஷ் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். நேற்று ரமேஷ் வந்தபோது கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நிலையில் அவரது 16 வயதான மகள் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ரமேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான ரமேசை போலீசார் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குபேந்திரன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா (வயது29) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    குபேந்திரன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டார். வீட்டில் ரஞ்சிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ரஞ்சிதா வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜின் மகன் சந்தோஷ் (26) என்பவர் திடீரென்று வீட்டின் சுவரை ஏறி குதித்து, தூங்கி கொண்டிருந்த ரஞ்சிதாவின் அறைக்குள் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் ரஞ்சிதா சத்தம்போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர். இதனை பார்த்த சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து ரஞ்சிதா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை கைது செய்தனர்.

    • சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர்.
    • ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நேற்று இரவு சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர். ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிவந்த டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. கஞ்சா கடத்திலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார்.
    • பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார்.

    குரும்பூர்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது மதிப்புள்ள இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு வந்துள்ளார்.

    பின்னர் குரும்பூர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆட்டோவில் வந்த டிரைவர் அவர் செல்ல வேண்டிய முகவரிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய முகவரிக்கு செல்லாமல் மாறாக ஏரல் சாலையில் அழைத்து சென்றுள்ளார்.

    ஏரல்-குரும்பூர் சாலை மறுகால் ஓடை பாலத்தின் கீழ் காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த வழியாக மோட்டார் கை்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் ஆட்டோ டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா விசாரணை நடத்தினார். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று கற்பழித்தது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் சன்னிதி தெருவை சேர்ந்த அய்யப்ப நயினார் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குரும்பூர் நெட்டையன்காலனியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே பச்சைவேலி கிராமப் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட அழகிய கூழாங்கற்கள் இருந்தது.இதனையடுத்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 23) என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவது தொடர்நிகழ்வாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே மட்டிகை கிராமத்தில் இருந்து அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு நிறுத்தப்ப ட்டிருந்த லாரியை 2 பேர் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு ப்பின் முரணாக பதில் கூறினர். அப்போது திடிரென ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், வெள்ளைக்கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் துரை (வயது 35) என்பதும், இவர் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் கோவிலாங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தராஜ் (40). லாரி உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அழகிய கூழாங்கற்களை எடுத்துச் சென்று விற்க திட்டமிட்டு, லாரியில் ஏற்றியுள்ளனர். கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த திருநாவலூர் போலீசார், லாரி உரிமையாளர் ஆனந்தராஜ், டிரைவர் துரை மீது வழக்குபதிவு செய்தனர். டிரைவர் துரையை கைது செய்த போலீசார், தப்பியோடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

    • கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.
    • தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது.

    கொளத்தூர்:

    மாதவரம், மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை சாலை அருகே கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர் சுப்பிரமணி, போலீஸ்காரர் கருப்பையா ஆகியோர் நேற்று இரவு அங்கு சென்று பார்த்தபோது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 13 லாரிகள் இருந்துள்ளன. ஒரு லாரியில் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருப்பது போல் டீசல் போடும் பம்பு அமைக்கப்பட்டு அந்த லாரியில் இருந்த டீசல் மற்ற லாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது.

    இதுகுறித்து அங்கிருந்த நாமக்கல்லை சேர்ந்த தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளம்பெண் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
    • ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி துறையில் முதன்மை செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் தினமும் தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு பஸ்சிலேயே பயணித்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று காலை இளம்பெண் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.

    அப்போது பஸ்சை ஓட்டிச்சென்ற சிறுமுகையை சேர்ந்த 35 வயது டிரைவர் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பஸ் அன்னூருக்கு சென்றதும், பஸ்சை விட்டு இறங்கி நேராக அன்னூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×