என் மலர்
தமிழ்நாடு

லாரியில் கடத்தப்பட்ட 400 கிலோ போதை பொருள் பறிமுதல்: டிரைவர் கைது
- லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டியில் சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (29) என்பவரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 29 மூட்டைகளில் 400 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Next Story