search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் கைது"

    • சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு வாகனம், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு தருமபுரி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக தருமபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அவரது உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், இளமதி ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையி்ல் புதிய ரவுண்டனா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மைசூருவில் இருந்து வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடகா மாநிலம் மைசூரு சி.வி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுல்லா செரிப் (50) என்பவர் மைசூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பானுசுஜதா, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வேனில் கடத்தி வந்த சம்பவம் போலீசாரால் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
    • பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

    உடுமலை:

    உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி, தலைமை காவலர் கோவிந்தராஜு ஆகியோர் தலைமையில் போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தளி பேரூராட்சி பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் (வயது 43) என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மொத்தம் 45.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார்.
    • முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஜீவகாந்த் (19), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பவானி பகுதியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார். இதை கவனிக்காததால் ஜீவகாந்த் லாரியின் பின்னால் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜீவகாந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.

    இதுகுறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சரத்குமார் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ஜீவகாந்த், வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 1000 லிட்டர் கள்ளத்தனமாக விற்க செல்லும் பொழுது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையான போலீசார் விடியற்காலை மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் என்பவரிடம் விசாரிக்கும் பொழுது தனது வாகனங்களுக்கு டீசல் வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.இந்த டீசல் வாங்கியதற்கான ரசீது கேட்ட பொழுது அவர் இல்லை எனவும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசார் தீவிர விசாரணை செய்ததில் தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசரை கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்தவாசி பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது பிடிபட்டார் என்பது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் 11 பேரல் டீசலையும் கைப்பற்றி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் (வயது 44) பிடித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டர் அருகே சட்டவிரோதமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது,அவ்வழியாக ஆட்டோவில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ்(வயது39) என்பதும், ஆட்டோ டிரைவராக இருப்பதும் தெரியவந்தது.

    மேலும், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கி சென்றது.
    • வேனின் படிக்கட்டை பிடித்து பெண் போலீஸ் ஜீவா தொங்கிய நிலையில் இருந்தபோது டிரைவர் பெருமாள் வேனை நிறுத்தாமல் ஓட்டி அவரை இழுத்து சென்றார்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் ஜீவா (வயது 34).

    நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் வீராணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பெண் போலீஸ் ஜீவா போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கி சென்றது. இந்த வேனை மானாம்பதியை சேர்ந்த டிரைவர் பெருமாள் ஓட்டினார். அவர் குடிபோதையில் இருந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த வேன் டிரைவர் பெருமாள் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். இதனால் பெண் போலீஸ் ஜீவா வேன் டிரைவரை தட்டிக் கேட்டார். ஆனாலும் வேன் டிரைவர் பெருமாள் தொடர்ந்து ஹாரன் அடித்தார். அதை பெண் போலீஸ் ஜீவா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேன் டிரைவர் பெருமாள், பெண் போலீஸ் ஜீவா மீது மோதுவது போல் வேனை ஓட்டி அவர் மீது உரசியபடி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் ஜீவா வேனுக்குள் ஏற முயன்றார். வேனின் படிக்கட்டை பிடித்து அவர் தொங்கிய நிலையில் இருந்தபோது டிரைவர் பெருமாள் வேனை நிறுத்தாமல் ஓட்டி பெண் போலீஸ் ஜீவாவை இழுத்து சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வேனின் குறுக்கே நிறுத்தி பெண் போலீஸ் ஜீவாவை மீட்டனர்.

    பின்னர் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உட னடியாக அங்கு வந்தனர். காயம் அடைந்த பெண் போலீஸ் ஜீவாவை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பெருமாளை கைது செய்தனர். வேனையும் பறிமுதல் செய்து டிரைவர் பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமார் மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் எபி என்ற குமார் (வயது 32). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு அருகே அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உனது குடும்பத்தை காலி செய்து விடுவேன், உனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • போலீசார் வாகனத் தணிக்கையில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியை சேர்ந்த ஆனந்தன் ( வயது 25) என்பதும், இவர்

    லோடு ஆட்டோவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 15 அட்டை பெட்டிகளில் 1440 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. மேலும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மது போதையில் தகராறு
    • போலீசார் விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அக்கிரெட்டிபுதூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரது தம்பி சந்திரசேகர் (35) ஆட்டோடிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு, அண்ண னிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர், அண்ணன் அசோக்குமாருடன் தகராறில் ஈடுப்பட்டார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    ஆவேசமடைந்த சந்திரசேகர், அசோக்குமாரின் ஆள்காட்டி விரலை கடித்து துப்பிவிட்டார். வலி தாங்காமல் துடித்த அசோக்குமாரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து அசோக்குமார் காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்.
    • அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.

    விளாத்திகுளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (வயது48). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக நாகஜோதியின் கார் டிரைவரான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் அவரது சகோதரர் குழந்தைக்கனி, உறைகிணறு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர கணபதி 4 பேரை கைது செய்து குளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மைக்கேல்ராஜ் கூறியதாவது:-

    எனது பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன். ஆனால் என்னிடம் அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் நாகஜோதியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

    சம்பவத்தன்று காலை நாகஜோதிக்கு போன் செய்து விளாத்திகுளத்தில் எனக்கு ஒருவர் பணம் வரவேண்டியுள்ளது என்றும், என்னுடன் வந்தால் அதை வாங்கி உங்கள் கடனை கொடுத்துவிடுகிறேன் எனக்கூறி நாகஜோதியை அழைத்து வந்தேன். பின்னர் நாகஜோதியை விளாத்திகுளம் அழைத்து வந்தேன். சூரங்குடியில் எனது சகோதரர் குழந்தைக்கனி, உறவுக்காரர்காளான மிக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி சென்றேன்.

    சூரங்குடியில் இருந்து கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குமாரசக்கனபுரம் கிராமம் அருகில் காரில் வைத்தே கயிற்றைக்கொண்டு நாகஜோதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

    பின்னர் நாகஜோதியின் உடலை காரின் உள்பகுதியில் இருந்து தூக்கி டிக்கியில் வைத்து கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு உடலை கொண்டு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி காருடன் நாகஜோதியை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×