என் மலர்

    நீங்கள் தேடியது "love torture"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
    • ஞானசுப்பிரமணியன் தொடர்ந்து வற்புறுத்தியதால் பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் டவுனில் உள்ள ஒரு தட்டச்சு பயிற்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் தனது தங்கைக்கு ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இருந்து வாலிபர் ஒருவர் காதலிக்குமாறு வற்புறுத்துவதாகவும், அவரை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து மர்மநபரை தேடியதில், அந்த நபர் பாளை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஞானசுப்பிரமணியன்(வயது 28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் தங்கை டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    ஆனாலும் அவரை போன் செய்து தொந்தரவு செய்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்கள் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சாத்தான்குளம் அருகே மாணவனின் காதல் தொல்லை தாங்காமல் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மணப்பாட்டை சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் ஜெயபாரதி(வயது 20). இவர் தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் இடைச்சிவிளையை சேர்ந்த முத்து மகன் ரவிகுமார்(21) என்பவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அடிக்கடி மாணவி ஜெயபாரதியிடம் சென்று தன்னை காதலிக்க வேண்டும் என கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஆனால் அதற்கு மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஜெயபாரதியிடம் மீண்டும் மாணவன் ரவி குமார், என்னை காதலிக்க வேண்டும் என தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த மாணவி கல்லூரி மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. இதனால் வலியில் துடித்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் காதல் தொல்லை தாங்காமல் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவன் ரவிகுமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
    ×