என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா கடத்திய வாகனம் மற்றும் கைதான டிரைவர்.
ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய டிரைவர் கைது -தப்பிய ஆசாமிக்கு வலை
- பான்பராக் பொருட்கள் மூட்டை, மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- ஓட்டுநர் இம்ரான் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய சந்தோஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சப்பள்ளியிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர்.
பின்னர் போலீசார் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் ரூ.3.26 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் பொருட்கள் மூட்டை, மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாகனத்துடன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதை பொருட்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் இம்ரான் (வயது. 24) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பியோடிய சந்தோஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
பெங்களுரிலிருந்து தேன்கனிகோட்டை வழியாக சேலத்திற்கு கொண்டு செல்ல குட்காவை கடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






