search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீசல் கடத்தல்"

    • சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 1000 லிட்டர் கள்ளத்தனமாக விற்க செல்லும் பொழுது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையான போலீசார் விடியற்காலை மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் என்பவரிடம் விசாரிக்கும் பொழுது தனது வாகனங்களுக்கு டீசல் வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.இந்த டீசல் வாங்கியதற்கான ரசீது கேட்ட பொழுது அவர் இல்லை எனவும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசார் தீவிர விசாரணை செய்ததில் தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசரை கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்தவாசி பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது பிடிபட்டார் என்பது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் 11 பேரல் டீசலையும் கைப்பற்றி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் (வயது 44) பிடித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.
    • தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது.

    கொளத்தூர்:

    மாதவரம், மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை சாலை அருகே கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர் சுப்பிரமணி, போலீஸ்காரர் கருப்பையா ஆகியோர் நேற்று இரவு அங்கு சென்று பார்த்தபோது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 13 லாரிகள் இருந்துள்ளன. ஒரு லாரியில் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருப்பது போல் டீசல் போடும் பம்பு அமைக்கப்பட்டு அந்த லாரியில் இருந்த டீசல் மற்ற லாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது.

    இதுகுறித்து அங்கிருந்த நாமக்கல்லை சேர்ந்த தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புதுவையில் இருந்து 1800 லிட்டர் டீசல் கடத்திய மினி லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் பிரம்மதேசம் அருகே சொக்கநாததாங்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை தடுப்பு காவல் துறை ஐ.ஜி. காமினி ஆணைக்கிணங்க, சூப்பிரண்டு கீதா உத்தரவிக்கிணங்க, துணை சூப்பிரண்டு மனோகர் மேற்பா ர்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே சொக்கநாததாங்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 11 பேரல்களில் 1800 லிட்டர் டீசல் இருந்தததை கண்டனர். மேலும், இது புதுவை மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    இதனையடுத்து மினி லாரி டிரைவர் ராஜேஷை (வயது 28) கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த டீசல் கல்குவாரிக்கு வாங்கிச் சென்றதும், இந்த மினி லாரியும் கல்குவாரிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து டீசலையும், மினி லாரியையும் பறிமுதல் சய்த போலீசார் கல்குவாரி உரிமையாளர் பிரேமசிவம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • காரைக்காலில் இருந்து டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.
    • தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94 வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த கடத்தல் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பத்தூர் பகுதியில், திருநள்ளாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது காரைக்கால் அடுத்த பச்சூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து, தமிழக பகுதியான சேலத்திற்கு, 12,000 லிட்டர் டீசல் கடத்தி சென்றது தெரியவந்தது. காரைக்காலில் ஒரு லிட்டர் டீசல் ரூ.86 என்றால், தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94 வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த கடத்தல் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரிச்செல்வன் (வயது 25), பெட்ரோல் பங்க் மேலாளர் ராஜ்குமார் (38), ஊழியர் மதிமாறன் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கைது செய்யப்பட்ட 3 பேரையும், கடத்தல் லாரியையும் ஒப்படைத்தனர்.

    ×