search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எஸ்.சி."

    • ஆலங்குளம் அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலங்குளம் அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற, ஆலங்குளம் அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று பல்வேறு துறை அரசு பணிகளில் சேர உள்ளவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு, தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாமோகன்லால், அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஷீலா, வட்டார நூலகர் பழனீஸ்வரன், நூலக வாசகர்கள் வட்ட தலைவர் தங்கசெல்வம், மனவளக்கலை மன்ற பேராசிரியர் . சிவஞானம், செங்கோட்டை நூலக வாசகர்கள் வட்ட நூலகர் ராமசாமி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆலங்குளம் அரசு கலை கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள்14-ந் தேதி –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது. 74 லட்சம் பேர் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

    கடந்து சில மாதங்க ளுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இது வரை இல்லாத வகை யில் 21, 85,328 பேர் விண்ணப்பித்தி ருக்கிறார்கள். அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப்-2, குரூப்- 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும், குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    குரூப்-1 தேர்வில் எத்தனை காலி இடங்கள் என்ற விவ ரங்கள் இல்லாததும் இளை ஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் 5.50 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. எனவே கடந்த 18 மாதத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • இலவசப் பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
    • பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட உள்ள துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், துணை பதிவாளா் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் போன்ற பணியிடங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோ்வு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. அதேபோல, குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்த பயிற்சி வகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 21-ந்தேதி அறிமுக வகுப்பு நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 46 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    மேலும் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தத் திட்ட மிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி (திங்கள்கிழமை) பகல் 11 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகல் மற்றும் தேர்வு மைய அனுமதிச் சீட்டு ஆகியவற்றுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21-ந் தேதி வருகை புரியுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்து உள்ளார்.

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடக்கிறது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 2022 பணி காலி இடங்களுக்குரிய முதல்நிலை தேர்வு 19.11.2022 மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 27.11.2022 அன்று தேர்வு நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இந்த தேர்வுக்காக இலவச 3 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வு 9.11.2022 (புதன்கிழமை), 15.11.2022 (செவ்வாய்கிழமை), 17.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் தமிழ்நாடு 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கான மாதிரி தேர்வு 18.11.2022 (வெள்ளிக்கிழமை), 23.11.2022 (புதன் கிழமை), 24.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் 04567-230160 மற்றும் 9487375737 (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மாதிரி தேர்வை எழுத வரும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த விபரம், நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாது கொண்டு வர வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 22-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வருகிற 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தொடர்புக்கு 04562-293613.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைக்குழந்தைகளுடன் மையங்களுக்கு வந்தவர்கள் உறவினர்களிடம் கொடுத்து சென்றனர்
    • தேர்வை எழுத 11 ஆயிரம் பேர் வரவில்லை

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வில்லை.

    இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதி யில் குரூப் 4 தேர்வு தொடர் பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் வெளியிடப் பட்டது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7,382 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தேர்வு எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். குமரி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான அழைப்பாணை ஆன்லை னில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் அதை பதிவிறக்கம் செய்தனர். அதில் தேர்வு மையம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்வு எழுதுபவர்கள் அந்தந்த மையம் எந்த பகுதியில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஒரு சிலருக்கான தேர்வு மையத்தை கண்டுபிடிப்ப தில் சிக்கல் ஏற்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட பகுதி யில் உள்ள இளைஞர் கள், இளம்பெண்கள் பல ருக்கு மேற்கு மாவட்ட பகுதி யில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அவர்கள் இன்று காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். பெண்களை தங்களது பெற்றோர் மற்றும் கணவர்கள் இருசக்கர வாகனங்களில் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி, குமரி மெட்ரிக் பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 38 மையங்களில் குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் காலை யிலேயே தேர்வு மையத் திற்கு வந்திருந்தனர். அவர்கள் பலத்த பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர்.

    ஒரு சில பெண்கள் கை குழந்தைகளுடனும் தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்கு உள்ளே சென்றபோது தங்களது கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் கை குழந்தையை கொடுத்து விட்டு சென்றனர்.

    கால்குலேட்டர், செல் போன்கள் போன்ற எலக்ட்ரா னிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து செல்போன்களை தங்களது உறவினர்களிடம் சிலர் கொடுத்து சென்றனர். மற்றவர்கள் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போன்களை வைத்து விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர்.

    தேர்வு மையத்திற்கு சென்ற இளம்பெண்களை அழைத்து வந்த பெற் ேறார்கள் தேர்வு மையத் திற்கு வெளியே கொழுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்த னர். தக்கலை, குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி, மார்த்தாண் டம், கருங்கல் உள்பட மாவட்டம் முழு வதும் 240 மையங்களில் இன்று தேர்வு நடந்தது தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    240 வீடியோ கிராபர்கள் மூலம் தேர்வு முழுவதும் பதிவு செய்யப்பட்டது. தேர்வை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் மற்றும் 240 அலுவலர்கள் 48 மொபைல் பறக்கும் படையினர் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் தேர்வுக்கு 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 11 ஆயி ரத்து 568 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை. 59 ஆயி ரத்து 884 பேரே தேர்வை எழுதினர்.

    • சிங்கம்புணரியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் தேர்வாளர்கள் தேர்வு எழுதினர்.
    • 1,547 பேருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு காலை 9 மணி முதல் தேர்வு தொடங்கியது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் முதல் முறையாக டி.என். பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு மையங்களாக செயின் ஜோசப் மகளிர் கல்லூரி, பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 5 இடங்களில் 6 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று தேர்வு நடந்தது.

    வழக்கமாக மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற இடங்களில் சிங்கம்புணரி பகுதி தேர்வாளர்கள் சென்று எழுதி வந்த நிலையில் இந்த வருடம் டி.என்.பி.எஸ்.சி.க்கான தேர்வு மையங்கள் சிங்கம்புணரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தாலுகா தேர்வாளர்கள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர்.1,547 பேருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு காலை 9 மணி முதல் தேர்வு தொடங்கியது.

    வட்டாட்சியர் கயல்செல்வி தலைமையில் நடைபெறும் இந்த தேர்வுகளில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சுந்தரராஜன் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவும், சிவராமன் தலைமையில் மற்றொரு குழுவும் என 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தேர்வு மையங்களில் ஆய்வு அலுவலர்கள் வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
    • அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு நடைபெறுகிறது.

    இதையடுத்து தேர்வு எழுதும் மையங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டு வருகிறார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை பார்வையிட்டு பள்ளி கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளதா அடிப்படை வசதி இருக்கின்றதா மின்விளக்குகள் சரிவர வேலை செய்கின்றதா ? என்று ஆய்வு செய்தார்.

    மேலும் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், அந்தியூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் யசோதா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி வந்திருந்தனர்.

    அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும்.
    • சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டு விடாமுயற்சியில் படித்தேன் என்று ஷீஜா கூறினார்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 13-ந்தேதி நேர்காணல் தேர்வு நடைபெற்றது.

    வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டி.எஸ்.பி., வணிகவரி உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகள் ஷீஜா மாநில அளவில் 9-வது இடம்பிடித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும். மாநில அளவில் 9-வது இடம் பெற்றது குறித்து ஷீஜா கூறுகையில், சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டுவிடாமுயற்சியில் படித்தேன். எனது பெற்றோரின் உதவியுடன் இந்நிலைக்கு வந்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார்.

    ×