search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோ்வு"

    • இலவசப் பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
    • பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட உள்ள துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், துணை பதிவாளா் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் போன்ற பணியிடங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோ்வு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. அதேபோல, குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்த பயிற்சி வகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.
    • நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்படி கடந்த மாா்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். நாளை(சனிக்கிழமை) 19-ந்தேதி வரை நடைபெறும் தாள் - 1 தோ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,035 போ், நாமக்கல் டிஜிட்டல் ஹப் நிறுவனத்தில் 900 போ், திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வி நிறு வனத்தில் 900 போ், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் 900 போ், கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் 1,716,

    குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களில் 800 போ், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 720 போ் என மொத்தம் 6,971 போ் ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதுகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட கல்வித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    ×