search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grace"

    • ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.
    • நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்படி கடந்த மாா்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். நாளை(சனிக்கிழமை) 19-ந்தேதி வரை நடைபெறும் தாள் - 1 தோ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,035 போ், நாமக்கல் டிஜிட்டல் ஹப் நிறுவனத்தில் 900 போ், திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வி நிறு வனத்தில் 900 போ், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் 900 போ், கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் 1,716,

    குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களில் 800 போ், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 720 போ் என மொத்தம் 6,971 போ் ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதுகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட கல்வித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • குலதெய்வக்காரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களால் நாளை காலை நடைபெற இருக்கிறது.
    • அம்மன் அருள் பெற பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குலதெய்வக்காரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களால் நாளை 5-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது. இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருளைப்பெற பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஒரு கலம் அளவு செப்புக் காசுகளை உருக்கி செய்யப்பட்ட பிள்ளையார் என்பதால் கலக்காசு பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
    • பிரகார வினாயக ர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் ஆராதனைகள் நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலக்காசு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு கலக்காசு பிள்ளையார் வீதி உலா நடந்தது.

    முன்னொரு காலத்தில் நடந்த ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செப்புக்காசுகளில் கும்பாபிஷேக செலவு போக மீதமிருந்த 12 மரக்கால் எனும் ஒரு கலம் அளவு செப்புக் காசுகளை உருக்கி செய்யப்பட்ட பிள்ளையார் என்பதால் கலக்காசு பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    மேலும், ஐயாறப்பர் கோயிலிலுள்ள ஓலமிட்ட வினாயகர், ஆதிவினா யகர், இரட்டை வினாயகர் மற்றும் பிரகார வினாயக ர்களுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம்மற்றும் ஆராதனைகள் நடந்தது.

    திருவையாறு மேட்டு த்தெரு அபீஷ்ட வரத வினாய கருக்கு சந்தணக் காப்பிலும், வடம்போக்கித் தெரு அக்காசாலைகம்மாள வினாயகருக்கு வெள்ளிக் கவசத்திலும், மேலவீதி சக்தி வினாயகர் சிறப்பு அலங்காரத்திலும், வாத்தலையம்மன் கோயில் வினாயகர்சந்தனக் காப்பிலும் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்கள்.

    ×